தூத்துக்குடியில் டிராகன் சிட்டோ ரியூ கராத்தே சங்கம் சார்பாக மண்டல அளவிலான ஒரு நாள் பயிற்சி வகுப்பு 28 - 2 - 2021 ஞாயிறு கிழமைஅன்று தூத்துக்குடி காமராஜ் கல்லூரி கலை அரங்கில் நடைபெற்றது
இந்த ஒரு நாள் பயிற்சி முகாமில் கராத்தே தற்காப்பு கலையின் புதிய நூட்பங்கள் தொடர்பான பயிற்சிகள் யாவும் தஞ்சையை சேர்ந்த " சீ கான்" S. S. செந்தில் குமார் B Se அவர்கள் தலைமையில் கற்று கொடுக்கப்பட்டது . இந்த ஒரு நாள் பயிற்சி முகாமிற்கு தூத்துக்குடி - திருநெல்வேலி - கன்னியாகுமரி - ஆகிய மூன்று மாவட்டங்களில் இருந்து 200 மாணவ - மாணவியர்கள் கலந்து கெண்டனர்
இந்த முகாமில் கலந்து கொண்டு பயிற்சி பெற்ற மாணவ மாணவி யர்களுக்கு மாலையில் தூத்துக்குடி " ஸ்ரீ கருப்பசாமி உமா ஜூவல்லர்ஸ் " உரிமையாளர் ராம் குமார் " சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் காமராஜ் கல்லூரியின் முதல்வர் நாகராஜன் - கல்லூரியின் H.0. D தேவராஜ் - தொழில் அதிபர் முனியசாமி - ஆகியோர் மாணவ - மாணவியர்களை ஊக்கப்படுத்தி வாழ்த்தி பேசி னர் பின்னர் முகாமில் கலந்து கொண்டு பயிற்சி பெற்ற மாணவ - மாணவியர்கள் அனைவருக்கும் தூத்துக்குடி. உமா ஜூவல்லரி சார்பில் அதன் நிர்வாக இயக்குனர் ராம்குமார. சான்றிதழகளும் ,நினைவு பரிசுகளும் வழங்கினார்கள் .

இந்த பயிற்சி முகாமை நிகழ்ச்சி ஏற்பாடுகளை டிராக்கன் "சிட்டோ ரியூ கராத்தே சங்க " செயலாளர் மாஸ்டர் E. ரத்னகுமார், தலைவர் மாஸ்டர் சிவா மற்றும் துனைத் தலைவர் P. விஜய் சேகர் திருநெல்வேலி டிராகன் சிட்டோ ரியூ . சங்க செயலாளர் ST சுபா சுணேஷ ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்
கருத்துகள்
கருத்துரையிடுக