முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள பாளையங்கோட்டை முதன்மை சாலை தமிழ் சாலை என பெயர் சூட்டப்பட்டது

 


தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள பாளையங்கோட்டை முதன்மை சாலை தமிழ் சாலை என பெயர் சூட்டப்பட்டது

தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள  பாளையங்கோட்டை முதன்மை சாலை தமிழ் சாலை என பெயர் சூட்டப்பட்டு பெயர் பலகையை மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள் திறந்து வைத்தார்                                                                  -------------------

தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகம் அருகில் தூத்துதுக்குடி மாநகராட்சியின் பாளையங்கோட்டை முதன்மை சாலைக்கு தமிழ் சாலை பெயர் பலகை திறப்பு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் (22.02.2021)  அன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள் கலந்துகொண்டு பெயர் பலகையை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.பி.சண்முகநாதன், மாநகராட்சி ஆணையர் திருமதி.சரண்யாஅரி, இ.ஆ.ப., மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ்.ஜெயக்குமார், இ.கா.ப., ஆகியோர் முன்னிலை வகித்தனர். 


பின்னர் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள் பேசியதாவது: 


தமிழ்நாடு அரசு தமிழ் ஆட்சிமொழி பண்பாடு மற்றும் தொல்லியல் துறையின் உயர்மட்ட கூட்டத்தில் நிறைவேற்றியுள்ள தீர்மானத்தின்படி மாவட்ட தலைநகரங்களில் அமைந்துள்ள முதன்மை சாலையினை “தமிழ் சாலை” என பெயர் சூட்ட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனடிப்படையில் தூத்துக்குடி மாவட்ட நிர்வாக அனுமதியுடன் தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பாளையங்கோட்டை மாநகராட்சி சாலையினை “தமிழ் சாலை” என பெயரிடப்பட்டு இன்று “தமிழ் சாலை” பெயர் பலகை திறந்து வைக்கப்பட்டுள்ளது. தமிழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் “தமிழ் சாலை” என பெயர் வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.


நிகழ்;ச்சியில் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் திரு.மோகன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் திரு.சுதாகர், மாநகராட்சி செயற்பொறியாளர்கள் திரு.ரெங்கநாதன், திரு.சேர்மக்கனி, நகர்நல அலுவலர் திருமதி.நித்யா, உதவி செயற்பொறியாளர் திரு.சரவணன், முக்கிய பிரமுகர் திரு.ஆறுமுகநயினார் மற்றும் பல்வேறு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.





கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்