முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அமைச்சர் கடம்பூர் ராஜூ வேட்புமனு தாக்கல்


                                                            

வேட்புமனு தாக்கல்                                            

கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ போட்டியிடுகிறார். வேட்புமனு தாக்கல் செய்வதற்காக கோவில்பட்டி மெயின் ரோட்டில் உள்ள அ.தி.மு.க. தேர்தல் அலுவலகத்தில் இருந்து நேற்று அவர் கூட்டணி கட்சியினருடன் கோவில்பட்டி மெயின் ரோடு, மாதா கோவில் ரோடு, எட்டயபுரம் ரோடு வழியாக உதவி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார்.

அங்கு உதவி கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான சங்கர நாராயணனிடம் அவர் வேட்புமனு தாக்கல் செய்தார். மாற்று வேட்பாளராக கடம்பூர் ராஜூவின் மனைவி இந்திரா காந்தி மனு தாக்கல் செய்தார்.                                                                     

பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜூ  செய்தியாள்களிடம்  பேசிய போது :

கோவில்பட்டி தொகுதியில் 3-வது முறையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளேன். கடந்த 2011-ம் ஆண்டு தேர்தலில் வென்று சட்டமன்ற உறுப்பினராகவும், 2016-ம் ஆண்டு தேர்தலில் வென்று செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சராகவும் பணியாற்றி வருகிறேன்.                                                                                                                         

தொடர்ந்து 10 ஆண்டுகளாக தொகுதி மக்களுக்கு எண்ணற்ற நலத்திட்டங்களை பெற்று தந்துள்ளேன். வருகிற தேர்தலில் என்னை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும் டெபாசிட் இழக்கக்கூடிய வகையில் சிறப்பான வெற்றியை பெறுவேன். தேர்தல் ஆணையம் என் மீது பதிவு செய்த வழக்கை சட்டப்படி சந்திப்பேன். 

இவ்வாறு அவர் கூறினார்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்