மாற்றுத்திறனாளிகள் இருசக்கர வாகன தேர்தல் விழிப்புணர்வு பேரணி


  

---

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில தமிழக சட்டமன்ற பொது தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம்; மாற்றுத்திறனாளிகள் இருசக்கர வாகன பேரணி மற்றும் கையெழுத்து இயக்கம் துவக்கி வைக்கும் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் கலந்துகொண்டு இன்று (15.03.2021) கொடியசைத்து துவக்கி வைத்தார்.    

         . .                                  .                                     .                                                                 பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர்ஃமாவட்ட தேர்தல் அலுவலர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:

தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலையொட்டி 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் இன்றைய தினம் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு இருசக்கர வாகனத்ததின் மூலம் விழிப்புணர்வு பிரசாரம் துவக்கி வைக்கப்பட்டது. மேலும் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி கையெழுத்து இயக்கத்தையும் துவக்கி வைத்து மாற்றுத்திறனாளிகள் கையொப்பமிட்டனர்.                                                          


                    .                                                                                                                                இந்த பேரணியானது மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் துவங்கி 3ம் மைல், பாலிடெக்னிக், மில்லர்புரம், விவிடி சிக்னல், கோர்ட் வளாகம் வழியாக மாநகராட்சி அலுவலகத்தில் நிறைவு பெற்றது. இதன் மூலம் பல்வேறு பொதுமக்களுக்கு 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி மனசாட்சிப்படி ஓட்டுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வாங்காமல் ஜனநாயகத்தின் கடமையாக வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது என தெரிவித்தார்.

          . .  .  . . .                                                                                                                             நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.கண்ணபிரான், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு.பிரமநாயகம், வட்டார போக்குவரத்து அலுவலர் (தூத்துக்குடி) திரு.விநாயகம், துணை ஆட்சியர் (பயிற்சி) திரு.சதீஸ்குமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.வெ.சீனிவாசன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) திரு.ரா.ராமசுப்பிரமணியன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


கருத்துகள்