முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு கொரோனா விழிப்புணர்வு மற்றும் கொரோனா தடுப்பூசி போடுதல் குறித்த விழிப்புணர்வு மற்றும் ஆலோசனை கூட்டம்

 


.

-----------

தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை கூட்டரங்கில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வாக்குசாவடிகளில் பணியாற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு கொரோனா விழிப்புணர்வு மற்றும் கொரோனா தடுப்பூசி போடுதல் குறித்த விழிப்புணர்வு மற்றும் ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஃ மாவட்ட தேர்தல் அலுவலர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (05.03.2021) நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை சமூக நோய் தடுப்புத்துறை தலைவர் மரு.சுனிதா அவர்கள் கொரோனா விழிப்புணர்வு மற்றும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளுதல் குறித்து விரிவாக எடுத்து கூறினார்.

பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஃ மாவட்ட தேர்தல் அலுவலர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் பேசியதாவது:

தமிழகம் முழுவதும் இதுவரை 6,70,000 நபர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.  முன்கள பணியாளர்கள், வருவாய் துறையினர், காவல் துறையினர், 80 வயதிற்கு மேற்பட்டோர் மற்றும் இணைநோய் உள்ளவர்களுக்க தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. நமது மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலையொட்டி கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பல எடுக்கப்பட்டு வருகிறது. 1050 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குசாவடிகள் அனைத்தும் இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது.  ஏற்கனவே நமது மாவட்டத்தில் 1603 வாக்குசாவடிகள் இருந்தது.  தற்போது 2903ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் வாக்குப்பதிவு நேரம் 1 மணி நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் முகமூடி அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி வாக்குசாவடிக்கு வரும் வகையில் தன்னார்வலர்களை கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்.  பாதுகாப்பான முறையில் வரிசையில் வருமாறு நடவடிக்கை எடுக்கப்படும்.  மேலும் 80 வயதிற்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கும் தபால் ஓட்டு போடுவதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  வாக்காளர்கள் வாக்குப்பதிவு செய்யும்போது பாலிதின் கையுறைகள் அணிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 1903 வாக்குசாவடிகளில் ஆசிரியர்கள் மற்றும் பல்வேறு துறைகளை சார்ந்த 12000க்கும் மேற்பட்ட வாக்குசாவடி அலுவலர்கள் பணியாற்ற உள்ளார்கள்.  மேலும் 3000க்கும் மேற்பட்ட காவல் துறையினர், 3000க்கும் மேற்பட்ட வருவாய் துறை, ஊரக வளர்ச்சி துறை மற்றும் பல்வேறு துறை அலுவலர்களும் என கிட்டத்தட்ட 19000க்கும் மேற்பட்ட நபர்கள் தேர்தல் பணியாற்ற உள்ளார்கள்.  இவர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.  வாக்குசாவடியில் பணியாற்றும்போது சாணிடைசர் பயன்படுத்த வேண்டும். அவசியம் முகமூடி அணிய வேண்டும். உங்கள் ஒவ்வொருவரின் நலனை காக்கவும், பொதுமக்களின் நலனை காக்கவும் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.  மற்றவர்களுக்கும் இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.  தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவின்போது கொரோனா பரவாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அனைத்து அலுவலர்களும், பொதுமக்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என பேசினார்.

இக்கூட்டத்தில் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.ரேவதி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருமதி.ஞானகௌரி, தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு.பாவலன், துணை கண்காணிப்பாளர் மரு.குமரன், கோவேக்சின் தடுப்பூசி ஒருங்கிணைப்பாளர் மரு.மாலையம்மாள் மற்றும் ஆசிரியர்கள், பல்வேறு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்