உலக உலக மகளிர் தினமான மார்ச் 8ஆம் தேதி நேற்று சமூக நல துறை . மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடுதுறை சார்பிலும் தூத்துக்குடி மாவட்ட அமைப்பு சாரா தொழிலாளர் நலச் சங்கம் சார்பிலும் மகளிர் தினத்தை தூத்துக்குடி ரோச் பார்க் முன்பாக நேற்று காலையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது
இந்த நிகழ்ச்சியில் திருமதி ஷெலின் S. ஜார்ஜ் center Administrator One Stop center, Thoothukudi அவர்களும். சமூக நல ஆர்வலர் பேராசிரியை பாத்திமா பாபு , T..செல்வ மெர்ஸி Protectlon officer - DSWD- S. வீரம்மாள் Women Welfare Officer, MSK-DSWD - மின்னல் அம்ஜத் : தலைவர் தூத்துக்குடி மாவட்ட அமைப்பு சாரா தொழிலாளர் சங்கம் ஆகியோர் கலந்து கொண்டு பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமை பாலியல் தொந்தரவு போன்றவற்றிலிருந்து தன்னை காப்பாற்றி கொள்ளவும், பாதுகாத்துக் கொள்ளவும், என்னென்ன வழி முறைகள் உள்ளது என்பது பற்றி பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மத்தியில் பேசினர்கள் பின்பு நிகழ்ச்சியில் கலந்து கொன்ட பெண்கள் அனைவராலும் உறுதி மொழி எடுத்துக் கொள்ளப்பட்டது பெண் குழந்தைகளை கொண்டு கேக் வெட்டி அனைவருக்கும் கேக் பகிரப்பட்டது ... மேலும் ஷெலின் அவர்கள் தனது உரையின் போது , வரும் தேர்தலில் நாம் அனைவரும் நமது ஜனநாயக கடமையான வாக்கு பதிவு என்பதை மறக்காமல்செய்ய வேண்டும் என கூடியிருந்தவர்களிடம் விழிப்புணர் எற்படுத்தும் வகையில் பேசினார் . இந்த நிகழ்ச்சியில் பெண் குழந்தைகள் சிலம்பம் - பாக்ஸிங் - ஸ்கேட்டிங் என வீர விளையாட்டு சாகசங்களை நிகழ்த்தினர்
இந்த மகளீர் தின நிகழ்ச்சி நடைபெற உறுதுணையாக இருந்து அனைத்து ஏற்பாடுகளை செய்த கிரசன்ட் கன்சல்டன்சன் சர்வீசஸ் மற்றும் மேன் பவர் சப்ளையர்ஸ் அம்ஜத் அவர்களை அனைவரும் பாராட்டினர்
கருத்துகள்
கருத்துரையிடுக