தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா- 19 தீவிர தடுப்பு நடவடிக்கைகள்



தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா- 19 தீவிர தடுப்பு நடவடிக்கைகளுக்காக நோய்  கட்டுப்பாட்டு பகுதிகளில் கபசுர குடிநீர்  விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.  மேலும் இருவேளை கிருமிநாசினி மூலம் தெளிப்பு தூய்மை பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.  நடமாடும் மாதிரி சேகரிப்பு வாகனம் மூலம் கொரோனா தொற்று மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. வல்லுநர் குழுக்களின்  பரிந்துரைகளின் படி இரத்தக் கொதிப்பு, இதயநோய், சிறுநீரகபாதிப்பு, புற்றுநோய் போன்ற தொற்றா நோய் பாதிப்புள்ள மக்கள், கர்ப்பிணி தாய்மார்கள், குழந்தைகள், முதியோர் போன்ற நோய் தொற்றினால்  எளிதில் பாதிக்கக் கூடிய நபர்களுக்கு கொரோனா தொற்று வராமல் தடுக்க களப்பணியாளர்கள் மூலம் தொடர்ந்து கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  தொடர் கண்காணிப்பு, முகக் கவசம் அணிதல், அபராதம் விதிப்பு, திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளில் முகக்கவசம் அணிதல் ஆகியவை கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.                                                                                               தற்காலிகமாக நியமிக்கப்பட்ட பணியாளர்கள் மூலமாக வீடுவீடாக சென்று ஆய்வுபணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  அவ்வாறு ஆய்வு பணிகள் மேற்கொள்ளும் போது வீட்டில் இருப்பவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டால் அவர்களை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மேலும் பொது இடங்களில் மக்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும்.  சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும.; உணவுக் கூடங்கள், தொழிற்சாலைகள், இறைச்சிக் கூடங்கள், மீன் மார்க்கெட், காய்கறி மார்க்கெட் போன்ற இ;டங்களில் பொதுமக்கள் அதிகமாக கூடுவதை தவிர்க்கவேண்டும். பொதுமக்கள் அனைவரும் ஒருமித்தக் கருத்தோடு அரசு அறிவித்த வழிகாட்டு நெறிமுறைகளை தவறாமல்; கடைபிடிக்க வேண்டும். அப்படி பின்பற்றினால் தான் நோயினை கட்டுக்குள் கொண்டு வர முடியும். வீட்டில் இருந்து வெளியில் செல்லும் போதும் முகக்கவசம் அணிந்து கொள்ள வேண்டும். பொருட்களை வாங்குகின்ற போது சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். வெளியில் இருந்து வீட்டிற்குள் சென்ற உடன் கைகளை சுத்தமாக சோப்பு போட்டு கழுவ வேண்டும்.பொது கழிப்பறைகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் வீட்டில் யாருக்காவது தொற்று அறிகுறி தென்பட்டால் உடனடியாக அவர்களை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க வேண்டும.; தொழிற்சாலைகள், உணவுக் கூடங்கள் மார்க்கெட் போன்றவற்றின் உரிமையாளர்கள் தங்களது ஊழியர்களுக்கு தடுப்பு  ஊசிபோட ஏற்பாடு செய்ய வேண்டும். இதற்கு அந்தந்த பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைகள்; தயார் நிலையில் உள்ளது. 

கொரானோ-19 தீவிர தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டத்தில் 20.04.2021 அன்று காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை கீழ்கண்ட இடங்களில் காய்ச்சல் முகாம்கள் நடைபெற உள்ளன.

தூத்துக்குடி மாநகராட்சி:

9 முதல் 11 வரை


11.00 முதல் 1.00 வரை


3.00 முதல் 5.00வரை


வார்டு எண் - 36,    மில்லர்புரம்.

வார்டு எண்  - 6, போல்பேட்டை. வார்டு எண் - 43, பிரையண்ட நகர் - 7வது தெரு கிழக்கு (வுனுவுயு ஸ்கூல்)


வார்டு எண்: 34,          பி ரூ டி காலனி - 9வது தெரு,           

வார்டு எண்: 5, எட்டையாபுரம் ஹவுசிங் போர்டு, 

வார்டு எண்: 46, பக்கிள்புரம் - 3வது தெரு (மச்சோடா காம்பவுண்ட்).

வார்டு எண்: 36,

ராஜீவ் நகர்-9வது தெரு.

வார்டு எண்: 36

சின்னமணி நகர்.

வார்டு எண்: 37,             அண்ணா நகர் - 12வது தெரு (விநாயகர் கோவில் அருகில்).

வார்டு எண்: 11,            கிருஷ்ணராஜபுரம் - 9 வது தெரு (சனிக்கிலாஸ் வீடு),

வார்டு எண்: 32, தெற்கு காட்டன் ரோடு. காரப்பேட்டை ஆண்கள் பள்ளி.

வார்டு எண்: 4

(ஸ்டேட் பாங்க் காலனி கிழக்கு - வடக்கு மண்டலம் அருகில்)

வார்டு எண்: 28

(ஸ்மார்ட் சிட்டி முனிசிபல்)

வார்டு எண்: 48

(அமுதா நகர்)



தூத்துக்குடி சுகாதார மாவட்டம்:

சுகாதார

வட்டாரம்

9.00 முதல் 11.00 வரை

11.00 முதல் 1.00 வரை

2.00 முதல் 4.00 வரை


புதுக்கோட்டை

 குலையன்கரிசல்

மேலகூட்டுடன் காடு

 புதுக்கோட்டை 


முதலூர்;

ஞானியார் குடியிருப்பு, பண்டாரபுரம்

புதுக்குளம், வடக்கு அமுதுண்ணாகுடி

புதுக்குளம் காலனி, தெற்கு அமுதுண்ணாகுடி


மெஞ்ஞானபுரம்

மேலராமசாமிபுரம், வெள்ளாளன்விளை

அடைக்கலாபுரம்,

தைக்காவூர்

நங்கைமொழி,

ஜே.ஜே. நகர்


தென் திருப்பேரை

அன்புநகர்

பனிக்கநாடார் குடியிருப்பு

மழவராயநத்தம்


வல்லநாடு

வடக்கு காரசேரி

சீத்தார்குளம்

கீழ வல்லநாடு


ஏரல்

நட்டாத்தி

பட்டாண்டிவிளை

முள்ளன்விளை


காயாமொழி

அருணாசலபுரம்,

பிலோமிநகர்

சிவன்கோவில் தெரு,

வீரபாண்டியபட்டினம்

கே.டி.எம். தெரு, மடத்துவிளை


கருங்குளம், 

ஆலந்தா

மேலபூவாணி

உயர்நிலைப் பள்ளி தெரு, வல்லநாடு.


ஆழ்வார் திருநகரி

வடக்கு 

கடையனோடை

குயின் தெரு, நாசரேத்.

புன்னக்காயல்



கோவில்பட்டி சுகாதார மாவட்டம்:

சுகாதார வட்டாரம்

9.00 முதல் 11.00 வரை

11.00 முதல் 1.00 வரை

2.00 முதல் 4.00 வரை


கடம்பூர்

முடுக்கலான்குளம்,

அய்யனார்ஊத்து,

ஆசூர்

இலந்தம்பட்டி,

பெரியசாமிபுரம்,

வாகைதாவூர்

ஓட்டரன்பட்டி, திருமங்கலகுறிச்சி,

வடக்கு மயிலோடை


பேரிலோவன்பட்டி

ராமனூத்து, 

கமலாபுரம்

தலைக்காட்டுபுரம், கூத்தலுரணி

கழுகாசலபுரம்,

கந்தசாமிபுரம்


புதூர்

பட்டித்தேவன்பட்டி,

சங்கரலிங்கபுரம்,

காடல்குடி

செங்கோட்டை, சின்னவ நாயக்கன்பட்டி,

மிட்டவடமலாபுரம்

கீழக்கரந்தை, சல்லிசெட்டிபட்டி,

மல்லீஸ்வரபுரம்


ஓட்டநத்தம்

கொடியன்குளம், 

ஒணமாகுளம்

கீழக்கோட்டை,

இளவேலங்கால்

கோபாலபுரம், கொல்லங்கிணறு


கீழஈரால்

முடுக்கு 

மீண்டான்பட்டி

சத்திரப்பட்டி

நாச்சியார்புரம்


பொதுமக்கள் அனைவரும் மேற்கண்ட முகாம்களில் தவறாது கலந்து கொண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா-19 தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கும்படி மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.கி.செந்தில்ராஜ்,இ.ஆ.ப., அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.



கருத்துகள்