முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுப்பது குறித்து விழிப்புணர்வு.

 


       



தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்  பொதுமக்களுக்கு கபசுர குடிநீர், முகக்கவசம் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமயில் நடைபெற்றது.


தற்போது கொரோனா வைரஸ் பரவல் 2வது கட்டமாக தீவிரமாக அதிகரித்து வருகிறது. இது குறித்து தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் மத்திய மாநில அரசுகள் விதித்துள்ள நெறிமுறைகளை கடைபிடிப்பதற்கும், அவற்றை அமல்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. முகக்கவசம் அணியாமல் செல்பவர்களுக்கு ரூபாய் 200ஃ- அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. 


அதன்படி இன்று (09.04.2021) தூத்துக்குடி காவல்துறை சார்பாக குரூஸ்பர்னாந்து சிலை சந்திப்பில் பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் பரவல் குறித்தும், பரவாமல் தடுப்பதற்கான அரசு விதித்துள்ள நெறிமுறைகள் குறித்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. 


இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பேசுகையில்; கொரோனா வைரஸ் தற்போது நாளுக்கு நாள் இரண்டாம் கட்டமாக வேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸ் முற்றிலும் ஒழிப்பதற்கு பொதுமக்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், கைகளை அடிக்கடி கிருமி நாசினி மற்றும் சோப்பு போட்டு நன்றாக கழுவி சுத்தம் செய்ய வேண்டும். தமிழக அரசு நாளை (10.04.2021) முதல் கல்யாண மண்டபங்கள், பொதுகூட்டங்கள், திருவிழாக்கள் மற்றும் திரையரங்குகளில் மக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்க சில கட்டுபாடுகளை விதித்துள்ளது. எனவே நாம் அரசுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து கொரோனா தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்றும், வைரஸ் நோய்க்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பொதுமக்கள் கபசுரகுடிநீர் எடுத்துகொள்ள வேண்டும் என்றும், முகக்கவசம் அணியாமல் செல்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் எடுத்துரைத்தார். பின் அனைவருக்கும் கபசுரக்குடிநீர் மற்றும் முகக்கவசம் வழங்கினார். 


இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் திரு. கணேஷ், தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. ஆனந்தராஜன், போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. செந்தில்சுரேஷ், உதவி ஆய்வாளர்கள் திரு. முருகபெருமாள், திரு. காமராஜ் திரு. வெங்கடேஷ் மற்றும் தனிப்பரிவு உதவி ஆய்வாளர் திரு. ஞானராஜ், தலைமைக் காவலர் திரு. சுப்பிரமணியன் உள்ளிட்ட காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்