முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடி காவல்துறையினருக்கு. கோவிஷீல்டு தடுப்பூசி சிறப்பு முகாம்



         




தூத்துக்குடி காவல்துறையினருக்கு கொரோனா வைரஸ் தொற்று நோயிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்கான கோவிஷீல்டு தடுப்பூசி சிறப்பு முகாம் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் ஆரம்ப சுகாதார மையத்தில் நடைபெற்றது.


தற்போது கொரோனா வைரஸ் பரவல் 2வது கட்டமாக தீவிரமாக பரவி வருகிறது.  பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்காக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் மாவட்டத்திலுள்ள விருப்பமுள்ள அனைத்து காவல்துறையினருக்கும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் பொருட்டு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 


அதன்படி அன்று (18.04.2021) தூத்துக்குடி மாநகர காவல்துறையினருக்கு கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு தூத்துக்குடி கணேஷ் நகரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் கோவிஷீல்டு தடுப்பூசி போடும் நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் தூத்துக்குடி நகர துணை காவல் கண்காணிப்பாளர் திரு. கணேஷ் முன்னிலையில் உதவி ஆய்வாளர்கள், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் உட்பட காவல்துறையினர் 30 பேர் இந்த சிறப்பு முகாமில் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். 


இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பேசுகையில்; கொரோனா வைரஸ் தற்போது நாளுக்கு நாள் இரண்டாம் கட்டமாக வேகமாக பரவி வருகிறது. இந்தக் கொடிய நோய் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்கு பொதுமக்கள் தமிழக அரசு விதித்துள்ள நெறிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்கவேண்டும். நாம் அனைவரும் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், கைகளை அடிக்கடி கிருமி நாசினி மற்றும் சோப்பு போட்டு நன்றாக கழுவி சுத்தம் செய்ய வேண்டும் என்றும், கொரோனா தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசி போட்டுக்கொள்வது மிகச் சிறந்ததாகும். மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுரகுடிநீர் எடுத்துகொள்ள வேண்டும்  என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் எடுத்துரைத்துத்தார். பின் காவல்துறையினருக்கு கபசுரக்குடிநீர் வழங்கினார். 


இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி கணேஷ் நகர் ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவர் திருமதி. ஆர்த்தி, தூத்துக்குடி மாநகர நல அலுவலர் திருமதி. வித்யா, தூத்துக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் திரு. கணேஷ், தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. ஆனந்தராஜன், வடபாகம் காவல் நிலைய ஆய்வாளார் திரு. அருள், தெர்மல்நகர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. சாந்தி, தாளமுத்துநகர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. ஜெயந்தி, போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. செந்தில்சுரேஷ் மற்றும் உதவி ஆய்வாளர்கள் உட்பட காவல்துறையினர்; பலர் கலந்து கொண்;டு கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்