முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சிதலைவர் மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரி அரசியல் கட்சி பிரமுகர்களுடனான ஆலோசனைக்கூட்ட

 


தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக அரசியல் கட்சி பிரமுகர்களுடனான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஃ மாவட்ட தேர்தல் அலுவலர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. 

---------------------------

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக அரசியல் கட்சி பிரமுகர்களுடனான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஃ மாவட்ட தேர்தல் அலுவலர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (22.04.2021) நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.கண்ணபிரான் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஃ மாவட்ட தேர்தல் அலுவலர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் பேசியதாவது:

தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு பொறியியல் கல்லூரியில் 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே இடத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி கொரோனா வைரஸ் பரவலை தடுத்திடும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாக்கு எண்ணிக்கை மேஜைகள் இடத்திற்கு தகுந்தவாறு குறைக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கைக்கு வருகை தரும்  முகவர்கள் அனைவரும் சுவுPஊசு டெஸ்டினை 28.04.21 மற்றும் 29.04.21 ஆகிய இரு தினங்களுக்குள் எடுத்திட வேண்டும். வாக்கு எண்ணும் மையத்திற்குள் வேட்பாளர்கள் ஃ முகவர்கள் கண்டிப்பாக முககவசம், கையுறை,                 குயஉந ஷீல்ட் ஆகியவை அணிய வேண்டும். வாக்கு எண்ணிக்கைக்கு வருகை தரும் முகவர்கள் அனைவருக்கும் சம்மந்தப்பட்ட வேட்பாளர்களால் சானிடைசர் வழங்கப்பட வேண்டும். வாக்கு எண்ணிக்கை மேஜை அருகில் சமூக இடைவெளியினை கடைபிடித்திட வேண்டும். வாக்கு எண்ணும் மையத்திற்குள் வேட்பாளர்கள் ஃ முகவர்கள் ஆகியோருக்கு காலை ஃ மதியம் ஃ இரவு உணவு சம்மந்தப்பட்ட வேட்பாளர்களிடமிருந்து முன்பணம் பெற்று வழங்க வேண்டும்.

6 சட்டமன்ற தொகுதிகளின் வாக்கு எண்ணும் அறைகளில் மிண்ணனு அஞ்சல் முறை மூலம் பெறப்பட்ட வாக்குகளை எண்ணும் பணிக்காக இண்டர்நெட் வசதி ஏற்படுத்தப்பட்டு கணிணிஃமடிக்கணிணி வாயிலாக மாதிரி வாக்கு எண்ணும் பணி மேற்கொள்ளப்படவுள்ளது. வாக்கு எண்ணும் பணி முழுவதும் தலைமை தேர்தல் அலுவலர் அவர்கள் கண்காணித்திடும் வகையில் நேரடியாக ஒளிபரப்பு செய்திட தேர்தல் ஆணையத்தால் நியமனம் செய்யப்பட்ட நிறுவனத்தின் மூலம் வாக்கு எண்ணும் அரங்கில் சிசிடிவி கேமிரா நிறுவிடும் பணி மேற்கொள்ளப்படவுள்ளது. இப்பணிகளின்போது வேட்பாளர்களின் முகவர்களுக்கு இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்படும் என தெரிவித்தார்.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திருமதி.அமுதா, திருமதி.கீதாஜீவன், எம்.எல்.ஏ. (தி.மு.க.), திரு.சந்தானம், (அ.இ.அ.தி.மு.க.), திரு.சந்திரசேகர் (அ.இ.அ.தி.மு.க.), திரு.சாமுவேல்(சுயேட்சை), திரு.ராஜா (சி.பி.எம்), திரு.கிருபாகரன் (தி.மு.க.), சுகாதார பணிகள் துணை இயக்குநர்கள் மரு.போஸ்கோராஜா(தூத்துக்குடி), மரு.அனிதா (கோவில்பட்டி), பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர்கள் திரு.வெள்ளைச்சாமிராஜ்,  திரு.ராமலிங்கம், உதவி பொறியாளர் திரு.பாலா, தேர்தல் வட்டாட்சியர் திரு.ரகு மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.



வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், தூத்துக்குடி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்