இதன் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் தனலெட்சுமி ஒருங்கினைந்த சேவை மைய நிர்வாகி செலின் ஜார்ஜ் - ஆகியோரால் துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு காணாமல் போன சித்திரை செல்வி எப்ரல் 15ம் தேதி தூத்துக்குடிக்கு அழைத்து வரப்பட்டு 27-04-2021 திங்கள் கிழமை அன்று குடும்பத்தினருடன் சேர்த்து வைக்கும் நிகழ்ச்சி தூத்துக்குடி ஒருங்கினைந்த சேவை மையத்தில் நடைபெற்றது . . .
சித்திரை செல்வியை 8 ஆண்டுகளுக்கு பிறகு சித்திரை செல்வியை கண்ட குடும்பத்தினர் ஆனந்த கண்ணீருடன் கட்டித் தளுவி வரவேற்றனர் . இந்த உணர்ச்சி பூர்வமான நிகழ்வில் சித்திரை செல்வியை மீட்டுக் கொண்டு வந்த அதிகாரிகள் அனைவருக்கும் நன்றி பாராட்டப்பட்டது.
மேலும் பிரிந்து சென்ற சித்திரை செல்வியை மீட்டு வரப்பட்ட சந்தோசத்தை கொண்டாடும் விதமாக சித்திரை செல்வியை கொன்டு கேக் வெட்டி அனைவருக்கும் இனிப்பு பகிர்ப் பட்டது . இந்த நிகழ்ச்சியில் ஒருங்கினைந்த சேவை மைய நிர்வாகி செலின் ஜார்ஜ் - சேவைமைய அலுவலர்கள் மற்றும் திருவைகுண்ட அனைத்து மகளிர் காவல் நிலைய தலைமை காவலர் ஜெய பாரதி சித்திரை செல்வி குடும்பத்தினர் மற்றும் அவரது கலந்து கொண்டனர் சித்திரை செல்வியை மீட்டு வருவதில் ஒருங்கிணைந்த சேவை மையம் சமூகநலத்துறை மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை மற்றும் ரயில்வேதுறை இவர்களின் முயற்சியும் , செயல்பாடும் பாராட்டுக்குரியது
கருத்துகள்
கருத்துரையிடுக