தூத்துக்குடி மாவட்;டம்
கோவிட் 19 தடுப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகள்
தூத்துக்குடி ஸ்பிக் சாகர் சதன் கூட்டரங்கில் இருந்து அரசு முதன்மை செயலாளர் மற்றும் ஆணையர் கருவூலம் மற்றும் கணக்குத்துறைகள் திரு.குமார்ஜெயந்த், இ.ஆ.ப., அவர்கள் காணொலி மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இன்று (06.05.2021) ஆய்வு செய்தார்கள். இந்த ஆய்வு கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ்.ஜெயக்குமார், இ.கா.ப., மாநகராட்சி ஆணையர் திருமதி.ஷரண்யாஅறி, இ.ஆ.ப., சார் ஆட்சியர் திரு.சிம்ரன் ஜீத் சிங் காலோன், இ.ஆ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் திரு.கண்ணபிரான், உதவி ஆட்சியர் (பயிற்சி) திரு.ஸ்ருதஞ்ஜெய் நாராயணன், இ.ஆ.ப. மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள், அரசு முதன்மை செயலாளர் மற்றும் ஆணையர் கருவூலம் மற்றும் கணக்குத்துறைகள் திரு.குமார்ஜெயந்த், இ.ஆ.ப., அவர்களிடம் விரிவாக எடுத்துக்கூறினார். மேலும், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் திருமதி.ஷரண்யாஅறி, இ.ஆ.ப., தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் கொரோனா தொற்று ஏற்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் கண்காணிப்பது குறித்து விளக்கமாக எடுத்துக்கூறினார். பின்னர் அரசு முதன்மை செயலாளர் மற்றும் ஆணையர் கருவூலம் மற்றும் கணக்குத்துறைகள் அவர்கள், தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் குறித்தும் அவர்களுக்கு தேவைப்படும் ஆக்சிஜன் குறித்தும், கூடுதலாக ஆக்சிஜன் வசதியுடன் படுக்கைகளை அதிகரித்தல் குறித்தும் ஆய்வு செய்தார். மேலும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகள் குறித்தும் கேட்டறிந்தார். மேலும் பொதுமக்கள் முககவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும். அதற்கான விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்த வேண்டும். முககவசம் அணியாதவர்கள்மீது அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திருமதி.அமுதா, கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் திரு.சங்கரநாராயணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு.லட்சுமணன், சுகாதார பணிகள் இணை இயக்குநர் மரு.முருகவேல், தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.ரேவதி, முதன்மை கல்வி அலுவலர் திருமதி.ஞானகௌரி, மாவட்ட வழங்கல் அலுவலர் திரு.அபுல்காசிம், துணை இயக்குநர் சுகாதார பணிகள் மரு.அனிதா மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக