முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடி ஒன்றியம் மாப்பிள்ளையூரணியில் கோவிட் 19 தடுப்பூசி சிறப்பு முகாம்


தூத்துக்குடி ஒன்றியம் மாப்பிள்ளையூரணியில் கோவிட் 19 தடுப்பூசி சிறப்பு முகாமினை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி அவர்கள், மாண்புமிகு மீன் வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் ஆகியோர் துவக்கி வைத்தனர்                         -------                                                       தூத்துக்குடி ஒன்றியம் மாப்பிள்ளையூரணியில் கோவிட் 19 தடுப்பூசி சிறப்பு முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (16.05.2021) நடைபெற்றது. இம்முகாமினை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி அவர்கள், மாண்புமிகு மீன் வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

இம்முகாமை துவக்கி வைத்து மாண்புமிகு தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனாவில் பாதிப்பவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது. மக்களை கொரோனாவில் இருந்து பாதுகாக்கவே கொரோனா தடுப்பூசி போடுதல் மற்றும் ஊரடங்கு உத்தரவு உள்ளிட்டவைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது நமது மாவட்டத்தில் குறைந்த அளவே உள்ளது. இதை போக்கும் வகையில் தடுப்பூசி மையங்கள் மட்டுமின்றி மொபைல் டீம்கள் மூலம் கிராமப்பகுதிகளுக்கு நேரில் சென்று தடுப்பூசி பணிகளும் தொடங்கப்பட்டுள்ளது. நமது மாவட்டத்தில் உள்ள 1845 கிராமங்களிலும் முகாம் நடத்தும் வகையில் 36 குழுக்கள் மூலம் அவர்களின் வாழ்விட பகுதிக்கே சென்று தடுப்பூசி போடும் பணிகள் துவக்கப்பட்டுள்ளது. 45 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் இம்முகாம்களில் கலந்துகொண்டு கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். முகாம் நடத்துவது குறித்து ஆட்டோ மூலம் முன்றைய தினமே விளம்பரம் மேற்கொள்ளப்படும். அனைத்து கிராமங்களிலும் தடுப்பூசி போடும் வரை இப்பணிகள் தொடர்ந்து நடைபெறும்.  இம்முகாம்களில் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளும் மற்றும் அரசியல் அமைப்பை சேர்ந்தவர்களும் ஈடுபட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி அனைவரும் தடுப்பூசி போட ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தடுப்பூசி போடுவதால் எவ்வித பாதிப்பும் இல்லை. தடுப்பூசியால் மட்டுமே கொரோனா பாதிப்பில் இருந்து தற்காத்து கொள்ள பொதுமக்களுக்கு உணரச் செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.கண்ணபிரான், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு.லட்சுமணன், தூத்துக்குடி சுகாதார பணிகள் துணை இயக்குநர் மரு.போஸ்கோராஜா, தூத்துக்குடி ஒன்றியக்குழு தலைவர் திருமதி.வாசுமதிஅம்பாசங்கர், துணைத்தலைவர் திரு.சரவணக்குமார், முக்கிய பிரமுகர்கள் திரு.எஸ்.ஆர்.எஸ்.உமரிசங்கர், திரு.எஸ்.ஜெ.ஜெகன், திரு.ராமஜெயம், திரு.இளையராஜா மற்றும் அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்