கோவிட் 19 தடுப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகள

   

கோவிட் 19 தடுப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகள

தூத்துக்குடி மாவட்டம் மற்றும் மாநகராட்சி பகுதியில் 21.05.2021 அன்று சிறப்பு காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெறும் இடங்கள் - மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தகவல் 


தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா- 19 தீவிர தடுப்பு நடவடிக்கைகளுக்காக நோய்  கட்டுப்பாட்டு பகுதிகளில் கபசுர குடிநீர்  விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.  மேலும் இருவேளை கிருமிநாசினி மூலம் தெளிப்பு தூய்மை பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.  நடமாடும் மாதிரி சேகரிப்பு வாகனம் மூலம் கொரோனா தொற்று மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா பாதிப்பு கண்டறியும் பகுதிகளில் சிறப்பு காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டம் மற்றும் மாநகராட்சியில் 21.05.2021 அன்று சிறப்பு காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெறும் இடங்கள் 

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் காலையில் வார்டு 5, எட்டையாபுரம் ஹவுசிங் போர்டு வார்டு 6, சக்திவிநாயகபுரம், வார்டு 23, பிரமுத்து விளை வார்டு 19, எஸ்.எஸ்.மாணிக்கபுரம், வார்டு 34, தபால் தந்தி காலனி வார்டு 43,  பிரையண்ட் நகர் 7வது தெரு ஆகிய பகுதிகளிலும், மாலையில் வார்டு 4,  போல்பேட்டை மேற்கு, வார்டு 25,  கீழ ரங்கநாதபுரம், வார்டு 45,  தாமோதர நகர் ஆகிய பகுதிகளிலும் காய்ச்சல் சிறப்பு முகாம் நடைபெறும்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஊராட்சி பகுதிகளில் காலையில் காமராஜ்நகர், சக்கம்மாள்புரம், செந்தியம்பலம்,  நம்மாழ்வார்நகர், கட்டாலங்குளம், சேதுபுரி, கோவங்காடு, அம்பேத்கர் நகர் (கோவங்காடு), தெற்கு கோவங்காடு, கீழசெக்காரக்குடி, அழகாபுரி, கொம்புகாரநத்தம், மேலச்செக்காரக்குடி, நடுச்செக்காரக்குடி, சொக்கலிங்கபுரம், நல்லூர், தெற்கு நல்லூர், குழைக்கநாதபுரம், நாககன்னியாபுரம், குரங்கன்தட்டு, சாஸ்தாகோவில் விளை, வடக்கு நல்லூர், சுயம்புலிங்கபுரம், முத்துமாலைவிளை, புன்னக்காயல், புதுகாலனி, மாணிக்கபுரம், முத்துலெட்சுமிபுரம், கோவிந்தம்மாள்புரம், சாந்தபுரம், மருதூர்கரை, நவலடிவிளை, பள்ளக்குறிச்சி, சொக்கன்விளை, சுண்டங்கோட்டை, பெருமாள்நகர் காலனி, கருமாவிளை, பள்ளிப்பத்து, நாயனூர், காந்திபுரி, பிச்சிவிளை, சுகநகரம், ராமசாமிபுரம், பிச்சிக்குடியிருப்பு,இடைசெவல் ஊராட்சி - நாச்சியார்புரம் (ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி), சின்னமலைக்குன்று ஊராட்சி - சின்னமலைக்குன்று (சேவை மையக் கட்டிடம்), திப்பனூத்து (ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி), இராஜாபுதுக்குடி, சன்னதுபுதுக்குடி, தலையால்நடந்தான்குளம்,கீழவைப்பார் ஊராட்சி - குண்டப்பெருமாள்புரம், வைப்பார் ஊராட்சி - துலுக்கன்குளம், ஸ்ரீராமபுரம், மேல்மாந்தை ஊராட்சி - மேல்மாந்தை, சில்லாங்குளம், சுப்பம்மாள்புரம், பரமன்பச்சேரி, ஓம்.சரவணபுரம், குலசேகரநல்லூர், ஓசநூத்து, கருப்பூர், என்.சுப்புலாபுரம், தாப்பாத்தி, வேடபட்டி, கீழ அருணாசலபுரம், நடுக்காட்டூர் ஆகிய பகுதிகளிலும், மாலையில் சிவஞானபுரம், தங்கம்மாள்புரம், சேர்வைக்காரன்மடம், கே.புதூர், குமாரபொம்மையாபுரம், மஞ்சள்நீர்காயல், ஆதிதிராவிடர் காலனி  (மஞ்சள்நீர்காயல்), சிதம்பரநகர் (மஞ்சள்;நீர்காயல்), நாணல்காட்டான்குளம், கோனார்குளம், விளாத்திகுளம், ஈச்சந்தாஓடை, வடவல்லநாடு, சேதுராமலிங்கபுரம், பாறைக்காடு,மூக்குப்பீறி, ஒய்யான்குடி, ஞானராஜ்நகர், திருப்பணி, அணைத்தலை, கல்விளை, அருளானந்தபுரம், ஆசீர்வாதபுரம், குமாரலெட்சுமிபுரம், மணிநகர், வடக்கு உடைப்பிறப்பு, தெற்கு உடைப்பிறப்பு, அகஸ்தீஸ்வரம், புதூர், அடைக்கலாபுரம், சிவநாராயணபுரம், ராமநாதபுரம், புளியன்காட்டுவிளை, தர்மநகரம், இடைசெவல் ஊராட்சி - கார்த்திகைப்பட்டி (ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி), சின்னமலைக்குன்று ஊராட்சி - சாத்தூரப்ப நாயக்கன்பட்டி (சேவை மையக் கட்டிடம்), உசிலம்பட்டி                                      (ஊராட்சி ஒன்றியத் துவக்கப்பள்ளி), பாலையாபுரம், சன்னதுபுதுக்குடி கீழுர், மலையூரான்குடியிருப்பு, கைலாசபுரம், கீழவைப்பார் ஊராட்சி - அகமதுபுரம், வைப்பார் ஊராட்சி - ஸ்ரீராமபுரம், மேல்மாந்தை ஊராட்சி - இ.வேலாயுதபுரம், சங்கரராஜபுரம், பச்;சப்பெருமாள்புரம், செவல்குளம், பாஞ்சாலங்குறிச்சி, கட்டபொம்மன் குடியிருப்பு, இந்திராநகர், இனாம் அருணாசலபுரம்இ சிங்கிலிபட்டி, குமாரலிங்கபுரம்  ஆகிய பகுதிகளிலும் காய்ச்சல் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. 

எனவே பொதுமக்கள் அனைவரும் மேற்கண்ட முகாம்களில் தவறாது கலந்து கொண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா-19 தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறைக்கு  1077 கட்டணமில்லா தொலைபேசி எண் மூலமும் 0461-2340101 மற்றும் 9486454714 ஆகிய தொலைபேசி எண்களிலும்  பொது மக்கள் கொரோனா நோய்த் தொற்று குறித்து தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.



கருத்துகள்