கோவிட் 19 தடுப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகள்

 

தூத்துக்குடி மாவட்டம் மற்றும் மாநகராட்சி பகுதியில் 29.05.2021 அன்று காய்ச்சல் பரிசோதனை முகாம், மாதிரி சேகரிப்பு மற்றும் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் இடங்கள் - மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தகவல் 


தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா- 19 தீவிர தடுப்பு நடவடிக்கைகளுக்காக நோய்  கட்டுப்பாட்டு பகுதிகளில் கபசுர குடிநீர்  விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.  மேலும் இருவேளை கிருமிநாசினி மூலம் தெளிப்பு தூய்மை பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.  நடமாடும் மாதிரி சேகரிப்பு வாகனம் மூலம் கொரோனா தொற்று மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா பாதிப்பு கண்டறியும் பகுதிகளில் சிறப்பு காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டம் மற்றும் மாநகராட்சியில் 29.05.2021 அன்று காய்ச்சல் பரிசோதனை முகாம், மாதிரி சேகரிப்பு மற்றும் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் இடங்கள் 

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் காலை 9 முதல் மாலை 4 மணி வரை பாத்திமா நகர், தருவை ரோடு, கணேஷ்நகர், திரேஸ்புரம், Pரூவு காலனி, முள்ளக்காடு, லூர்தம்மாள் புரம் ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், மதுரா கோட்ஸ், சிலுவை கோவில் , நேதாஜி நகர்,போல்டன் புரம், சாமுவேல் புரம், வி.எம்.எஸ். நகர், சிப்காட், வுயுஊ நகர், எட்டையாபுரம், வீட்டு வசதி வாரியம் குடியிருப்பு, புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, மில்லர்புரம், புனித தாமஸ் மேல்நிலைப்பள்ளி, இஞ்ஞாசியர்புரம், காமராஜ் கல்லூரி, திருச்செந்தூர் ரோடு ஆகிய பகுதிகளிலும் முகாம் நடைபெறும்.

காயல்பட்டிணம் நகராட்சியில் காலையில் எல்.எப்.ரோடு, ஓடைகரை ஆகிய பகுதியிலும், மாலையில் ஓடைக்கரை  பகுதியிலும் முகாம் நடைபெறும். 

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஊராட்சி பகுதிகளில் காலையில் மறவன்மடம், வடக்கு தெரு, திருவனந்தபுரம், கால்வாய், மேலதூதுகுழி, ஆழிகுடி, மங்கலக்குறிச்சி, கீழமங்கலக்குறிச்சி, மேலமங்கலக்குறிச்சி, தேவராஜபுரம், புங்கன்காலனி, கல்லாமொழி, மணப்பாடு, சந்தையடியூர், கொட்டாங்காடு,காமராஜ்நகர், வாகைனேரி, தச்சன்விளை ஃ சமாதானபுரம், இடைச்சிவிளை, பூவன்விளை, மாணிக்கபுரம்,சிந்தலைக்கரை ஊராட்சி - துரைச்சாமிபுரம் (சிந்தலைக்கரை நடுநிலைப்பள்ளி) மீனாட்சிபுரம் ஊராட்சி - மீனாட்சிபுரம் (ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி),  சு .வெங்கடேஸ்வராபுரம் ஊராட்சி -    (சேவை மையம்), போடுபட்டி, தெற்கு பொம்மையாபுரம், முள்ளுபட்டி, பேரிலோவன்பட்டி, தலைக்காட்டுபுரம், நீராவிபுதுப்பட்டி (வடக்கு), கொம்பாடி, கொ.தளவாய்புரம், அகிலாண்டபுரம், வடக்கு ஆவரங்காடு, க.தளவாய்புரம், வெள்ளாரம் ஆகிய பகுதிகளிலும், மாலையில் கே.பி.தளவாய்புரம், செய்துங்கநல்லூர், அனவரதநல்லூர், கொட்டாரக்குறிச்சி, அண்ணாநகர், அரசன்குளம், செல்வநாயகநகர், அரியபுரம், அதிசயபுரம், கணபதிசமுத்திரம், லெட்சுமிபுரம்,குலசேகரப் பட்டினம், புதுமனை,குமரன்விளை, குட்டிகலசன்விளை ஃ பெத்லகேம், கல்லுள்ளிகுறிச்சி, கலியன்விளை, அதிசயபுரம்,  பனைவிளை,வரதம்பட்டி ஊராட்சி -  வள்ளிநாயகபுரம்  (சேவை மையம்) மீனாட்சிபுரம் ஊராட்சி - மீனாட்சிபுரம் (ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி) சு.வெங்கடேஸ்வராபுரம் ஊராட்சி -    (சேவை மையம்), வடக்கு பொம்மையாபுரம், தெற்கு பொம்மையாபுரம், ராஜீவ் காலனி, முதலிபட்டி, டி.தங்கம்மாள்புரம், புதுப்பட்டி, நீராவிபுதுப்பட்டி (வடக்கு) , ஜெக வீரபாண்டியாபுரம், மேலசெய்தலை, கே.சுப்பிரமணியாபுரம், கே.துரைச்சாமிபுரம், மீனாட்சிபுரம், விட்டிலாபுரம் ஆகிய பகுதிகளிலும் முகாம் நடைபெற உள்ளது. 

                                                                          எனவே பொதுமக்கள் அனைவரும் மேற்கண்ட முகாம்களில் தவறாது கலந்து கொண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா-19 தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறைக்கு 1077 கட்டணமில்லா தொலைபேசி எண் மூலமும் 0461-2340101 மற்றும் 9486454714 ஆகிய தொலைபேசி எண்களிலும்  பொது மக்கள் கொரோனா நோய்த் தொற்று குறித்து தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.



கருத்துகள்