முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மின்னல் தாக்கி உயிரிழந்த 4 நபர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி

 




தூத்துக்குடி மாவட்டத்தில் மின்னல் தாக்கி உயிரிழந்த 4 நபர்களின் வாரிசுதாரர்களிடம் மாநில பேரிடர் மேலாண்மை நிதி உதவித்தொகை தலா ரூ.4 லட்சத்துக்கான காசோலையினை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி அவர்கள், மாண்புமிகு சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள் ஆகியோர் இன்று (16.05.2021) வழங்கி குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர். தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் உடனிருந்தார்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வைப்பாறு 1 பகுதியை சேர்ந்த திரு.வனமல்லுசாமி என்பவரின் மகன் ரமேஷ் (வயது 30) என்பவர் 13.5.2021 அன்றும், வைப்பாறு 1 கோட்டைமேடு ஸ்ரீராமபுரம் பகுதியை சேர்ந்த கோட்டைப்பாண்டி (வயது 55) என்பவர் 13.5.2021 அன்று மழையின்போது இடி மின்னல்  தாக்கி உயிரிழந்தனர். இவர்களின் வீடுகளுக்கு தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி அவர்கள், மாண்புமிகு சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள் ஆகியோர் நேரில் சென்று உயிரிழந்த ரமேஷ் என்பவரின் தந்தை திரு.வனமல்லுசாமி, தாயார் திருமதி.ஜக்கம்மாள் மற்றும் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். மேலும் பேரிடர் மேலாண்மை நிதி உதவித்தொகை தலா ரூ.4 லட்சத்துக்கான காசோலையினை வழங்கினார்கள். அதனைத்தொடர்ந்து உயிரிழந்த கோட்டைப்பாண்டி என்பவரின் இல்லத்திற்கு சென்று அவரது மனைவி திருமதி.சாந்தி மற்றும் கர்ப்பிணி மகளிடம் ஆறுதல் தெரிவித்து ரூ.4 லட்சத்துக்கான காசோலையினை வழங்கினார்கள். இந்நிகழ்வில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜி.வி.மார்க்கண்டேயன் அவர்கள் கலந்துகொண்டு, குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து கயத்தாறு வட்டம் முடுக்கலாங்குளத்தை சேர்ந்த அழகுமுருகராஜ் (வயது 24) என்பவர் 11.5.2021 அன்று மழையின்போது இடி மின்னல்  தாக்கி உயிரிழந்தார். கயத்தாறு வட்டம் கலைப்பைபட்டியை சேர்ந்த மாரிமுத்து (வயது 40) என்பவர் 09.5.2021 அன்று மழையின்போது இடி மின்னல்  தாக்கி உயிரிழந்தார். இவர்களின் வீடுகளுக்கு தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி அவர்கள், மாண்புமிகு சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள் ஆகியோர் நேரில் சென்று உயிரிழந்த முருகராஜ் என்பவரின் தந்தை திரு.ஜெயச்சந்திரன், தாயார் திருமதி.பாக்கியலட்சுமி மற்றும் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். மேலும் பேரிடர் மேலாண்மை நிதி உதவித்தொகை தலா ரூ.4 லட்சத்துக்கான காசோலையினை வழங்கினார்கள். அதனைத்தொடர்ந்து உயிரிழந்த மாரிமுத்து என்பவரின் இல்லத்திற்கு சென்று அவரது மனைவி திருமதி.முருகலட்சுமி மற்றும் குடும்பத்தினரிடம் ஆறுதல் தெரிவித்து ரூ.4 லட்சத்துக்கான காசோலையினை வழங்கினார்கள். 

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.கண்ணபிரான், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு.லட்சுமணன், கோவில்பட்டி கோட்டாட்சியர் திரு.சங்கரநாராயணன், வட்டாட்சியர்கள் திரு.பேச்சிமுத்து (கயத்தாறு), திரு.ரகு(விளாத்திகுளம்), முக்கிய பிரமுகர்கள் திரு.ஜெகன் பெரியசாமி, திரு.சின்னப்பாண்டியன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.










கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்