நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் அமைப்பின் மூலம் தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைகளுக்கு கெரானா நிவாரண உதவி பொருட்கள்

 



தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் அமைப்பின் மூலம் ரூ.5 லட்சம் மதிப்பிலான கொரோனா நிவாரண உதவி பொருட்களை மாண்புமிகு மீன் வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்களிடம் இயேசு விடுவிக்கிறார் அமைப்பின் இயக்குனர் திரு.மோகன் சி லாசரஸ் அவர்கள் வழங்கினார். 

------------------                  தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் அமைப்பின் மூலம் ரூ.5 லட்சம் மதிப்பிலான கொரோனா நிவாரண உதவி பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று (18.05.2021) நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாண்புமிகு மீன் வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்களிடம், மாஸ்க், என் 95 மாஸ்க், ப்ளோமீட்டர், பல்ஸ் மீட்டர், சாணிடைசர், கையுறைகள், தெர்மல் தெர்மாமீட்டர்;, இருமல் மருந்துகள் உள்பட ரூ.5 லட்சம் மதிப்பிலான பல்வேறு கொரோனா நிவாரண உதவி பொருட்களை இயேசு விடுவிக்கிறார் அமைப்பின் இயக்குனர் திரு.மோகன் சி லாசரஸ் அவர்கள் வழங்கினார். மாண்புமிகு மீன் வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அவர்கள் கொரோனா நிவாரண உதவி பொருட்களை, திருச்செந்தூர் அரசு மருத்துவமனை  மருத்துவ அலுவலர் மரு.பொன்ரவி அவர்களிடம் வழங்கினார். 

நிகழ்;ச்சியில் திருச்செந்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் திரு.ஹர்ஸ்சிங், இ.கா.ப., திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் செல்வி.தனப்ரியா, திருச்செந்தூர் வட்டாட்சியர் திரு.முருகவேல், முக்கிய பிரமுகர்கள் திரு.எஸ்.ஆர்.எஸ்.உமரி சங்கர், திரு.ராமஜெயம், திரு.எஸ்;.ஜே.ஜெகன், திரு.எ.பி.ரமேஸ், திரு.வால்சுடலை, திரு.சுதாகர், திரு.அருணகிரி மற்றும் அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் உள்ளனர். 



கருத்துகள்