தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா நோய் தடுப்பு பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் மாண்புமிகு மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
மாண்புமிகு சமூக நலன் மகளிர் உரிமை துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள், மாண்புமிகு மீன் வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் திரு.அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் அவர்கள், சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர்.ராதாகிருஷ்ணன் இ.ஆ.ப., மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் செந்தில்ராஜ், இ.ஆ.ப., ஆகியோர் பங்கேற்றனர்.
----------------------------
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா நோய் தடுப்பு பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் மாண்புமிகு மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள் தலைமையில் (25.05.2021) அன்று நடைபெற்றது. மாண்புமிகு சமூக நலன் மகளிர் உரிமை துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள், மாண்புமிகு மீன் வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் திரு.அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் அவர்கள், சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர்.ராதாகிருஷ்ணன் இ.ஆ.ப., மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் செந்தில்ராஜ், இ.ஆ.ப., சட்டமன்ற உறுப்பினர்கள் திரு மார்க்கண்டேயன் (விளாத்திகுளம்), திரு.ஊர்வசி அமிர்தராஜ் (ஸ்ரீவைகுண்டம்), சுகாதார மற்றும் நோய் தடுப்புத்துறை இயக்குநர் டாக்டர் செல்வநாயகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ்.ஜெயக்குமார், இ.கா.ப., மாநகராட்சி ஆணையர் திருமதி.ஷரண்யாஅறி, இ.ஆ.ப., சார் ஆட்சியர் திரு.சிம்ரன் ஜீத் சிங் காலோன், இ.ஆ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் திரு.கண்ணபிரான் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலை வர் டாக்டர் செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது தொடர்பாகவும், தடுப்பூசி அவசியம் குறித்த விழிப்புணர்வு பணிகள், கிராமப்புற பகுதிகளில் மொபைல் டீம்கள் மூலம் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்துதல் குறித்தும், பல்வேறு அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் படுக்கை வசதிகளை அதிகரித்தல் தொடர்பான நடவடிக்கைகளையும், கொரோனா நோயாளிகளை பாதுகாக்க பாதுகாப்பு மையம் அமைத்தல் தொடர்பாகவும் மாவட்ட அளவிலான கொரோனாவார் கட்டுப்பாட்டு அறையின் மூலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளையும் கண்காணித்தல் தொடர்பாகவும், கொரோனா தொற்று ஏற்பட்டு வீடுகளில் தனிமையில் உள்ளவர்களை கண்காணித்தல் தொடர்பாகவும், கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளவர்களுக்கு படுக்கை வசதிகள் ஏற்படுத்தி தருவது தொடர்பாகவும், காணொலி மூலம் விரிவாக எடுத்துக்கூறினார். அதனை தொடர்ந்து மாண்புமிகு சமூக நலன் மகளிர் உரிமை துறை அமைச்சர் அவர்கள், மாண்புமிகு மீன் வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அவர்கள், சுகாதாரத்துறை செயலாளர் அவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் பல்வேறு கருத்துகளையும், ஆலோசனைகளையும் தெரிவித்தனர்.
கூட்டத்தில் மாண்புமிகு மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள் பேசியதாவது:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையான அரசு பொறுப்பேற்று 20 நாட்களில் கொரேனாவில் இருந்து மக்களை காக்க பல்வேறு நடவடிக்கைகளை போர் கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகளில் காப்பீடு திட்டத்தின் மூலம் சிகிச்சை இலவசமாக சிகிச்சை அளிக்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்து அரசாணையும் பிறப்பித்துள்ளார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா சிகிச்சைக்கு என காப்பீடு திட்டத்தில் 27 மருத்துவமனைகள் உள்ளது. இந்த மருத்துவமனைகளின் முன்பு கொரோனா சிகிச்சை காப்பீடு திட்டத்தின்கீழ் செய்யப்படும் என்ற அறிவிப்பு பேனர்களை வைக்கவும், காப்பீடு திட்டத்தில் சிகிச்சை பெற என்ன விபரங்கள் தேவை என்பதை பொதுமக்களுக்கு தெரிவிக்கும் வகையில் பேனர்கள் வைக்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும். பல்வேறு மாநகராட்சி உள்ள பகுதிகளில் ஏற்கனவே ஆய்வு செய்யப்ட்டது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கிராமப்புற பகுதிகளிலும் அதிக அளவில் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்ற உத்தரவிட்டதன் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு கிராம பகுதிகள் ஆய்வு செய்யப்பட்டது. சென்னை மாநகராட்சிதான் பல்வேறு கட்டுப்பாட்டு பகுதிகள் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்ட அளவில் அமைக்கப்பட்டுள்ள கொரோனாவார் கட்டுப்பாட்டு மையம் சென்னையில் உள்ளதைப்போல இங்கு சிறப்பாக அமைக்கப்பட்டு 24 ஓ 7 முழு கண்காணிப்பில் உள்ளது. அதைப்போலவே தூத்துக்குடி மாவட்டத்தில் கிராம பகுதிகளில் பல்வேறு கட்டுப்பாட்டு பகுதிகள் அமைக்கப்பட்டுள்ளது. சிறந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் கேட்டு கொண்டுள்ளவாறு விளாத்திகுளம் மருத்துவமனைக்கு கூடுதல் மருத்துவர்கள் நியமிக்கவும், மாண்புமிகு மீன்வளத்துறை அமைச்சர் அவர்கள் காயல்பட்டிணம் அரசு மருத்துவமனைக்கு சிறுபான்மையினர் நிதி ரூ.16 கோடி மதிப்பிட்டில் பல்வேறு கட்டிடங்கள் மற்றும் உபகரணங்களுடன் மேம்படுத்த தெரிவித்தார். இதுகுறித்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் கோரிக்கை வைத்தவாறு ஏரல் பகுதி ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆக்சிஜன் படுக்கை வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் நீண்ட கால தேவை அடிப்படையில் ஆக்சிஜன் வசதி ஏற்படுத்த காப்பர் குழாய்கள் மூலம் பணிகள் செய்யப்படுவதை சிறப்பாக உள்ளது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நேரடியாக தடுப்பூசிகளை சர்வதேச டெண்டர் மூலம் வாங்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். வரும் டிசம்பர் மாதத்துக்குள் அனைவருக்கும் தடுப்பூசிகள் போடப்பட்டுவிடும். தடுப்பூசி போடாதவர்களே இல்லை என்ற நிலை உருவாக்கப்படும். நான் பல்வேறு மாவட்டங்களில் ஆய்வுக்கு சென்றபோது இருசக்கர வாகனங்கள் மற்றும் மக்கள் நடமட்டம் இருந்தது. ஆனால் தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரடங்கு வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு மக்களும் ஒத்துழைப்புடன் வெளியில் வராமல் இருப்பதை பார்க்க முடிகிறது. கடந்த வாரத்தை காட்டிலும் தூத்துக்குடி மாவட்டத்தில் தொற்று குறைந்து வருகிறது. பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து சிறப்பாக கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருவதை பார்க்கும்போது தூத்துக்குடி கொரோனா தொற்று இல்லாத முதல் மாவட்டமாக மாறும் நிலை ஏற்படும் என்ற நம்பிக்கை உள்ளது. எனவே பல்வேறு துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து சிறப்பாக பணிகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
முன்னதாக கொரோனா நோயாளிகளுக்காக ஆக்சிஜன் வசதி செய்யப்பட்ட அழகர் பப்ளிக் ஸ்கூல் 2 பேருந்துகளை மாண்புமிகு மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள், மாண்புமிகு சமூக நலன் மகளிர் உரிமை துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள், மாண்புமிகு மீன் வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் திரு.அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் அவர்கள் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
மேலும் சூப்பர் கேஸ் நிறுவனத்தின் மூலம் தலா ரூ.70 ஆயிரம் மதிப்பிலான ஆக்சிஜன் கான்சன்டிரேட்டர் கருவிகள் 20 எண்ணிக்கையில் ரூ.14 லட்சம் மதிப்பில் நிறுவன மேலாளர்கள் திரு.காளிதாஸ், திரு.சுனித்தேப்நாத் ஆகியோர் மாண்புமிகு மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள், மாண்புமிகு சமூக நலன் மகளிர் உரிமை துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள், மாண்புமிகு மீன் வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் திரு.அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் அவர்கள் ஆகியோர்களிடம் வழங்கினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு.லட்சுமணன், வருவாய் கோட்டாட்சியர்கள் செல்வி.தனப்ரியா (திருச்செந்தூர்), திரு.சங்கரநாராயணன் (கோவில்பட்டி), தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் மரு.ரேவதிபாலன், இணை இயக்குநர் பொது சுகாதாரம் மரு.முருகவேல், சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர்கள் மரு.போஸ்கோ ராஜா (தூத்துக்குடி), மரு.அனிதா (கோவில்பட்டி), மாநகராட்சி நல அலுவலர் மரு.வித்யா, மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் திரு.மாரியப்பன் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக