முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழன்டா கலைக்கூட.ம் தமிழ் பண்பாடு மேம்பாட்டு மையம் சார்பாக. ஊரடங்கு கால நிவாரணப் பொருட்களை நாட்டுப்புற கலைஞர்களுக்கு மாவட்ட எஸ்.பி வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் எட்டயாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழ ஈரால் பகுதியில் தமிழன்டா கலைக்கூடம் மற்றும் தமிழ் பண்பாடு மேம்பாட்டு மையம் சார்பாக கொரோனா ஊரடங்கு கால நிவாரணப் பொருட்களை நாட்டுப்புற கலைஞர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் வழங்கினார்.



எட்டாயபுரம் தாலுகாவிற்குட்பட்ட பகுதியான கீழ ஈரால், எப்போதும்வென்றான் தம்பாள்யூரணி உட்பட சுற்று வட்டார பகுதிகளில் வசித்து வரும் சுமார் 80 நாட்டுப்புற கலைஞர்களுக்கு தமிழன்டா கலைக்கூடம் மற்றும் தமிழ் பண்பாடு மேம்பாட்டு மையம் சார்பாக கொரோன ஊரடங்கு கால நிவாரணப் பொருட்கள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.


அதை மேற்படி கலைக்கூடம் சார்பாக இன்று (22.05.2021) காலை எட்டையாபுரம் கீழ ஈரால் கிராமத்திலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ்.ஜெயக்குமார் அவர்கள் ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்த நாட்டுப்புற கலைஞர்களுக்கு அரிசிப்பை, காய்கறி தொகுப்பு, மளிகை பொருட்கள் மற்றும் முகக்கவசங்கள் வழங்கினார்.


அப்போது மாவட்ட கண்காணிப்பாளர் அவர்கள் பேசுகையில் தற்போது தமிழகத்தில் இந்த கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஒரு நாளைக்கு சுமார் 35,000 பேர் புதிதாக பாதிக்கப்படுகின்றனர். பலர் தினமும் உயிரிழக்கின்றனர். கொரோனா வைரஸை முற்றிலும் ஒழிப்பதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதற்காக ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு, நெறிமுறைகளையும் அறிவித்துள்ளது. அதை பின்பற்ற வேண்டியது நமது கடமை. ஆகவே நாம் அனைவரும் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும், முகக்கவசத்தை உரிய முறையில் மூக்கு, வாய் ஆகியவற்றை முற்றிலுமாக மறைத்து முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், கைகளை அடிக்கடி கிருமி நாசினி மற்றும் சோப்பு போட்டு நன்றாக கழுவி சுத்தம் செய்ய வேண்டும். கொரோனா தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுரகுடிநீர் எடுத்துகொள்ள வேண்டும், மேலும் கொரோனா தடுப்பூசி அனைவரும் போட்டு கொள்வதன் மூலம் நம் உயிரை காப்பாற்றிக் கொள்ளலாம் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் சிறப்புரையாற்றினார்.


இதற்கான ஏற்பாடுகளை தமிழன்டா கலைக்கூடம் மற்றும் தமிழ் பண்பாடு மேம்பாட்டு மையம் இயக்குனர் திரு. ஜெகஜீவன், ஆலோசகர்கள், திரு. பிரம்மராஜ், திரு. கதிர்வேல், செயலாளர் திரு. திருமணிராஜா, துணைச் செயலாளர் திரு. மந்திரமூர்த்தி மற்றும் மாணவர் தலைவர் திரு. கார்த்திக் ஆகியோர் செய்திருந்தனர்.

இதில் விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு. பிரகாஷ், எட்டையாபுரம் காவல்நிலைய ஆய்வாளர் திரு. ஜின்னா பீர் முகமது, உதவி ஆய்வாளர் திரு. பொன்ராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்