முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக இயக்கம் சார்பில் கொரோனா அன்னதான பணி துவக்கம்





மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக இயக்கம் சார்பில் கொரோனா அன்னதான பணியை தூத்துக்குடி அரசு மருத்துவமனை முன்பு ஏழை, எளிய மக்களுக்கு  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் மதிய உணவு பார்சல் வழங்கி துவக்கி வைத்தார்.

தூத்துக்குடி மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சார்பாக தூத்துக்குடியில் உணவின்றி கஷ்டப்படும் ஏழை எளிய மக்களுக்கு ஒரு நாளைக்கு 500 பேர் வரை அன்னதானம் ஏற்பாடு செய்துள்ளனர்.


மேற்படி அன்னதானத்தை இன்று (28.05.2021) தூத்துக்குடி அரசு மருத்துவமனை முன்பு ஏழை, எளிய மக்கள் 100 பேருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் மதிய உணவு பார்சல் வழங்கினார். இதுகுறித்து கொரோனா ஊரடங்கு காலத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் ஒருவர் கூட உணவில்லாமல்  கஷ்டப்படக்கூடாது என்பதுதான எங்களுடைய நோக்கம், ஆகவே இந்த கால கட்டத்தில் உதவி தேவைப்படுபவர்கள் தயங்காமல் மாவட்ட காவல் துறை அலுவலகத்தில் இதற்கென தனியாக 24 மணி நேரமும் இயங்கி வரும் சேவை மைய எண் 95141 44100 என்ற செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டால் உங்களுக்கு உதவி செய்யத் தயாராக இருக்கிறோம் என்று மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தெரிவித்துள்ளார். 

இதற்கான ஏற்பாடுகளை ஆன்மிக இயக்க மாவட்ட தலைவர் திரு. சக்தி.ஆர்.முருகன், பொறுப்பாளர்கள் திரு. கணேஷ், திருமதி. ஜோதி திரு. நெல்லைகுமார், திரு. முத்தையா, திரு. பொன் காசிராஜா, திரு. வேம்பு கிருஷ்ணன், திருமதி. பாக்கியம், திரு. மணிகண்டன்,  வட்டத் தலைவர் திரு. தினேஷ் ஆகியோர் செய்திருந்தனர். 

இதில் தூத்துக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் திரு. கணேஷ் உட்பட காவல்துறையினர் பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்