முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

திருடு போன. இருசக்கர வாகனங்கள் - மடிக்கணினி - செல்போன்கள் மீட்பு : மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு

 



தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 8 இடங்களில் திருட்டு, கொள்ளை வழக்குகளில் சம்பந்தப்பட்ட இளஞ்சிறார்கள் உட்பட 5 பேர் கைது - ரூபாய் 1.75 லட்சம் மதிப்புள்ள 5 இருசக்கர வாகனங்கள், மடிக்கணினி மற்றும் 7 செல்போன்கள் மீட்பு - கைது செய்த தனிப்படையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டு.


         கடந்த சில நாட்களாக தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில்; சில இடங்களில் திருட்டு சம்பவங்கள் நடந்தது. இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் திரு. கணேஷ் அவர்கள் மேற்பார்வையில் தென்பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. வேல்ராஜ், தலைமை காவலர் திரு. பென்சிங், தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய முதல் நிலை காவலர் திரு. மாணிக்கராஜ், தெர்மல்நகர் காவல் நிலைய முதல் நிலை காவலர் திரு. சாமுவேல், வடபாகம் காவல் நிலைய காவலர் திரு. மகாலிங்கம், தென்பாகம் காவல் நிலைய காவலர் திரு. திருமணிராஜன், முத்தையாபுரம் காவல் நிலைய காவலர் திரு. முத்துபாண்டி ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.


       மேற்படி தனிப்படையினர் சம்பவ இடங்கள் மற்றும் அருகில் உள்ள சி.சி.டி.வி பதிவுகளின் மூலம் தீவிர விசாரணை மேற்கொண்டதில் தூத்துக்குடி மீனவர் காலணியைச் சேர்ந்த லேயோன் மகன் மரியக்கண் ஜென்ஸ்டன் (20) மற்றும் 15, 16 வயது மதிக்கதக்க நான்கு இளஞ்சிறார்கள் ஆகியோர் சேர்ந்து தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த 28.04.2021 அன்று அண்ணாநகர் பகுதியில் உள்ள ஒரு கோயில் முன்பு நிறுத்தியிருந்த ஒரு இருசக்கர வாகனம், 29.04.2021 அன்று தூத்துக்குடி முத்துமாரியம்மன் கோவிலில் உள்ள உண்டியலை உடைத்து ரூபாய் 10,000ஃ- பணம், தூத்துக்குடி பைபாஸ் ரோட்டில் உள்ள ஒரு கல்லூரியின் முன்பு நிறுத்தியிருந்த ஒரு இருசக்கர வாகனம், 30.04.2021 அன்று கால்டுவெல் காலனி பகுதியில் வீடு புகுந்து 6 பவுன் தங்க நகை, மடிக்கணினி, செல்போன் மற்றும்; ரூபாய் 3,000ஃ-பணம், லயன்ஸ்டவுண் பகுதியில் வீட்டு முன்பு நிறுத்தியிருந்த இருசக்கர வாகனம், செல்போன் மற்றும் பணம் ரூபாய் 7,120ஃ-, இந்திரா நகர் பகுதியில் வீட்டு முன்பு நிறுத்தியிருந்த ஒரு இருசக்கர வாகனம், 01.05.2021 அன்று கால்டுவெல் காலனி பகுதியில் வீடு புகுந்து செல்போன் மற்றும் இந்திரா நகர் பகுதியில் வீட்டு முன்பு நிறுத்தியிருந்த ஒரு இருசக்கர வாகனம் ஆகியவற்றை திருடியதும் தெரியவந்தது.


மேற்படி தனிப்படையினர் எதிரிகள் மரியக்கண் ஜென்ஸ்டன் மற்றும் நான்கு இளஞ்சிறார்களை கைது செய்து அவரகளிடமிருந்து மொத்தம் ரூபாய் 1.75 லட்சம் மதிப்புள்ள 5 இருசக்கர வாகனங்கள், மடிக்கணினி மற்றும் 7 செல்போன்களை கைப்பற்றினர்.


பல பகுதிகளில் திருட்டு மற்றும் கொள்ளை வழக்கில் ஈடுபட்ட மேற்படி எதிரிகளை தீவிர விசாரணை மேற்கொண்டு விரைந்து கைது செய்த தனிப்படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் வெகுவாக பாராட்டினார்.





கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்