ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையால் மேற்கொள்ளப்படும் கொரோனா தடுப்பு பணிகள் ஆய்வு

தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையால் மேற்கொள்ளப்படும் கொரோனா தடுப்பு பணிகள் ஆய்வு

----------------------------

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை மூலம் கொரோனா தடுப்பு நடவடிக்கையான கிருமி நாசினி தெளித்தல், கிராமப்புற பகுதிகளை சுத்தம் செய்தல், சமூக இடைவெளி கடைபிடித்தல், இரட்டை மாஸ்க் அனிதல் போன்ற விழிப்புணர்வு,  கொரோனா தடுப்பூசி முகாம் நடத்துதல் மற்றம் உள்ளுர் விவசாயிகளிடமிருந்து காய்கறி மற்றும் பலசரக்கு பொருட்களை  கொள்முதல் செய்து பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று வழங்கிட ஏதுவாக நடமாடும் காய்கறி அங்காடியினை கிராம பகுதிகளில் உள்ள சுய உதவி குழுக்கள் மூலம் பொதுமக்களுக்கு கிடைக்க ஏற்பாடு செய்தல் போன்ற நடவடிக்கைகளை ஊரக வளர்ச்சித்துறை மூலம் ஒவ்வொரு மாவட்டத்திற்கு ஒரு கூடுதல் இயக்குநர் தலைமையில்  கண்காணிக்கப்பட்டு வருகிறது.


இதன் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு குறித்து அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு காணொளி வாயிலாக அறிவுரைகள் வழங்கப்பட்டது மேலும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கூட்டுடன்காடு கிராம ஊராட்சியில் மேலகூட்டுடன்காட்டில் கொரோனா பாதித்த பகுதி மற்றும் தெற்குசிலுக்கன்பட்டி கிராம ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி முகாமினை சென்னை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை முதன்மை பொறியாளர் திரு. யு. குற்றாலிங்கம் அவர்களால் பார்வையிடப்பட்டது. ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு.அ.இலட்சுமணன், செயற்பொறியாளர் (ஊ.வ) திருமதி. எஸ்.சங்கரஜோதி,  வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) திரு. சுரேஷ், மற்றும் உதவி பொறியாளர் திரு. தளவாய் ஆகியோர் கலந்து கொண்டனர்.



.


கருத்துகள்