முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையால் மேற்கொள்ளப்படும் கொரோனா தடுப்பு பணிகள் ஆய்வு

தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையால் மேற்கொள்ளப்படும் கொரோனா தடுப்பு பணிகள் ஆய்வு

----------------------------

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை மூலம் கொரோனா தடுப்பு நடவடிக்கையான கிருமி நாசினி தெளித்தல், கிராமப்புற பகுதிகளை சுத்தம் செய்தல், சமூக இடைவெளி கடைபிடித்தல், இரட்டை மாஸ்க் அனிதல் போன்ற விழிப்புணர்வு,  கொரோனா தடுப்பூசி முகாம் நடத்துதல் மற்றம் உள்ளுர் விவசாயிகளிடமிருந்து காய்கறி மற்றும் பலசரக்கு பொருட்களை  கொள்முதல் செய்து பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று வழங்கிட ஏதுவாக நடமாடும் காய்கறி அங்காடியினை கிராம பகுதிகளில் உள்ள சுய உதவி குழுக்கள் மூலம் பொதுமக்களுக்கு கிடைக்க ஏற்பாடு செய்தல் போன்ற நடவடிக்கைகளை ஊரக வளர்ச்சித்துறை மூலம் ஒவ்வொரு மாவட்டத்திற்கு ஒரு கூடுதல் இயக்குநர் தலைமையில்  கண்காணிக்கப்பட்டு வருகிறது.


இதன் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு குறித்து அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு காணொளி வாயிலாக அறிவுரைகள் வழங்கப்பட்டது மேலும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கூட்டுடன்காடு கிராம ஊராட்சியில் மேலகூட்டுடன்காட்டில் கொரோனா பாதித்த பகுதி மற்றும் தெற்குசிலுக்கன்பட்டி கிராம ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி முகாமினை சென்னை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை முதன்மை பொறியாளர் திரு. யு. குற்றாலிங்கம் அவர்களால் பார்வையிடப்பட்டது. ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு.அ.இலட்சுமணன், செயற்பொறியாளர் (ஊ.வ) திருமதி. எஸ்.சங்கரஜோதி,  வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) திரு. சுரேஷ், மற்றும் உதவி பொறியாளர் திரு. தளவாய் ஆகியோர் கலந்து கொண்டனர்.



.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்