முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தின் செயல்பாடுகள் ஆட்சித்தலைவர் தலைமையில் கண்காணிப்பு குழு ஆய்வு

 





தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தின் செயல்பாடுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில் ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையிலான கண்காணிப்பு குழுவினர் இன்று நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

-----------------------------------------------------------------------------------------------------------------------

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலைய கண்காணிப்பு மேற்கொள்ள மாண்பமை உச்சநீதிமன்றத்தின் மூலம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களை தலைவராகக்கொண்டு நியமிக்கப்பட்டுள்ள குழுவினர் கண்காணிப்பு குழு உறுப்பினர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ்.ஜெயக்குமார், இ.கா.ப., தூத்துக்குடி சார் ஆட்சியர் திரு.சிம்ரன் ஜீத் சிங் காலோன், இ.ஆ.ப., மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் திரு.சத்யராஜ், தூத்துக்குடி அனல்மின் நிலைய முதன்மை துணை வேதியலார் திரு.ஜோசப் பெல்லார்மின் அண்டன் சோரிஸ், சுற்றுச்சூழல் நிபுணர்கள் திரு.அமர்நாத், முனைவர்.கனகவேல் ஆகியோர் ஸ்டெர்லைட் ஆலை பகுதிக்கு சென்று இன்று (11.05.2021) கள ஆய்வு மேற்கொண்டனர்.                                      


 

அங்கு ஆக்சிஜன் தயாரிப்பு நிலைய பகுதியையும் ஆக்சிஜன் தயாரிப்பு பகுதியில் இருந்து மற்ற பகுதிகளுக்கு பணியாளர்கள் யாரும் செல்லாத வகையில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு தடுப்புகளை பார்வையிட்டனர்.  ஆக்சிஜன் உற்பத்தி நிலைய பகுதிக்கு வரும் பணியாளர்களை எந்த பாதையில் உள்ளே அனுமதிப்பது என்பது குறித்தும் ஆக்சிஜன் ஆலையில் உற்பத்தி செய்யப்படும் பிராணவாயுவை ஏற்றிச்செல்லும் கனரக வாகனங்கள் வந்துசெல்லும் தனியான பாதை குறித்தும் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று கள ஆய்வு மேற்கொண்டனர். ஆக்சிஜன் தயாரிப்பு நிலைய பகுதிக்கு தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மூலம் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளதையும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் இப்பகுதிக்கு தேவையான தண்ணீர் வழங்கப்பட்டுள்ளதையும் பார்வையிட்டனர். ஆக்சிஜனை வழங்க குழு அனுமதித்துள்ள எடை மேடை அமைக்கப்படும் பணிகள் குறித்தும் பார்வையிட்டனர்.

மேலும் ஆக்சிஜன் தயாரிப்பு நிலையத்தில் உள்ள இயந்திரங்கள் ஆக்சிஜன் தயார் செய்ய பராமரிப்பு பணிகள் மற்றும் சரி செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படுவதை வல்லுநர் குழுவுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது, குழு உறுப்பினர்கள் மற்றும் ஸ்டெர்லைட் ஆலை அலுவலர்கள் உடனிருந்தனர்.







கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்