கொரானா சிறப்பு நிவாரண நிதி ரூ.2000/ - மற்றும் 14 வகையான பொருட்கள் அடங்கிய மளிகை தொகுப்பு வழங்கும் பணிகள் துவக்க நிகழ்ச்சி
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரானா சிறப்பு நிவாரண நிதி ரூ.2000 / மற்றும் 14 வகையான பொருட்கள் அடங்கிய மளிகை தொகுப்பு வழங்கும் பணிகளை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர்
திருமிகு.கனிமொழி கருணாநிதி அவர்கள் நியாயவிலைகடைகளுக்குச் சென்று பொது மக்களுக்கு கொரானா சிறப்பு நிவாரண நிதி மற்றும் மளிகை தொகுப்புகளை வழங்கி துவக்கி வைத்தார்.
-----------------------------
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரானா சிறப்பு நிவாரண நிதி ரூ.2000/ - மற்றும் 14 வகையான பொருட்கள் அடங்கிய மளிகை தொகுப்பு வழங்கும் பணிகள் துவக்க நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.செந்தில் ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று மேல ஆத்தூர், சேதுகுவைத்தான், சிவகளை, பேட்மாநகரம், புதுக்கோட்டை ஆகிய பகுதிகளில் உள்ள நியாயவிலைக்கடைகளில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி அவர்கள் கலந்து கொண்டு பொது மக்களுக்கு கொரானா சிறப்பு நிவாரண நிதி மற்றும் மளிகை தொகுப்புகளை வழங்கி தூத்துக்குடி மாவட்டத்தில் வழங்கும் பணிகளை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு மீனவர் நலன்-மீன்வளத்துறை, கால்நடைபராமரிப்புத்துறை அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.சண்முகைய்யா, ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஊர்வசி அமிர்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கொரானா சிறப்பு நிவாரண நிதி மற்றும் மளிகை தொகுப்புகளை வழங்கி மாண்புமிகு.தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடந்த ஆட்சியின்போது கொரானா காலத்தில் பொதுமக்களுக்கு ரூ.1000ஃ- வழங்கப்பட்டது. பொதுமக்களுக்கு ரூ.5000ஃ- வழங்க வேண்டுமென கோரிக்கை வைத்தார்கள். ஆட்சிக்கு வந்தால் மீதமுள்ள ரூ.4000ஃ- வழங்கப்படும் என வாக்குறுதி அளித்தார்கள் அதனடிப்படையில் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றவுடன் குடும்ப அட்டைதாரர் அனைவருக்கும் ரூ.4000ஃ- வழங்கும் உத்தரவிற்கு முதல் கையெழுத்திட்டார்கள். முதல்கட்டமாக, ரூ.2000ஃ- வழங்கப்பட்டது. தற்போது மீதமுள்ள ரூ.2000ஃ-ம் ஊரடங்கு காலத்தில் பொதுமக்களுக்கு தேவையான மளிகை தொகுப்பு பொருட்களும் இன்று முதல் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் 960 நியாயவிலைக்கடைகளில் இணைக்கப்பட்டுள்ள 5,01,947 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு மொத்தம் ரூ.100.39 கோடி மதிப்பில் கொரானா நிவாரண உதவித்தொகையும், ரூ.20.20 கோடி மதிப்பில் 14 பொருட்களடங்கிய மளிகை தொகுப்பும் வழங்கப்படுகிறது. இதன் மூலம் மக்களுக்கு ஊரடங்கு காலத்தில் சிரமமின்றி இருக்க தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் (பயிற்சி) திரு.ஸ்ருதஞ்ஜெய் நாராயணன்,இ.ஆ.ப., கூட்டுறவு சங்கங்களின் இணைபதிவாளர் ரவிச்சந்திரன், மாவட்ட வழங்கல் அலுவலர் அப்துல் காசிம் முக்கிய பிரமுகர்கள் திரு.உமரி சங்கர், திரு.பில்லா ஜெகன், திரு.ராம ஜெயம், திரு.நவீன் குமார்;, வட்டாட்சியர் இசக்கி ராஜ் மற்றும் அலுவலர்கள் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக