முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கொரானா சிறப்பு நிவாரண நிதி ரூ.2000/ - மற்றும் 14 வகையான பொருட்கள் அடங்கிய மளிகை தொகுப்பு வழங்கும் பணிகள் துவக்க நிகழ்ச்சி


தூத்துக்குடி மாவட்டத்தில் கொரானா சிறப்பு நிவாரண நிதி ரூ.2000 / மற்றும் 14 வகையான பொருட்கள் அடங்கிய மளிகை தொகுப்பு வழங்கும் பணிகளை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர்


திருமிகு.கனிமொழி கருணாநிதி அவர்கள் நியாயவிலைகடைகளுக்குச் சென்று பொது மக்களுக்கு கொரானா சிறப்பு நிவாரண நிதி மற்றும் மளிகை தொகுப்புகளை வழங்கி துவக்கி வைத்தார். 

-----------------------------

    தூத்துக்குடி மாவட்டத்தில் கொரானா சிறப்பு நிவாரண நிதி ரூ.2000/ - மற்றும் 14 வகையான பொருட்கள் அடங்கிய மளிகை தொகுப்பு வழங்கும் பணிகள் துவக்க நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.செந்தில் ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று மேல ஆத்தூர், சேதுகுவைத்தான், சிவகளை, பேட்மாநகரம், புதுக்கோட்டை ஆகிய பகுதிகளில் உள்ள நியாயவிலைக்கடைகளில் நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி அவர்கள் கலந்து கொண்டு பொது மக்களுக்கு கொரானா சிறப்பு நிவாரண நிதி மற்றும் மளிகை தொகுப்புகளை வழங்கி தூத்துக்குடி மாவட்டத்தில் வழங்கும் பணிகளை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு மீனவர் நலன்-மீன்வளத்துறை, கால்நடைபராமரிப்புத்துறை அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.சண்முகைய்யா, ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஊர்வசி அமிர்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.                        


கொரானா சிறப்பு நிவாரண நிதி மற்றும் மளிகை தொகுப்புகளை வழங்கி மாண்புமிகு.தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடந்த ஆட்சியின்போது கொரானா காலத்தில் பொதுமக்களுக்கு ரூ.1000ஃ- வழங்கப்பட்டது.  பொதுமக்களுக்கு ரூ.5000ஃ- வழங்க வேண்டுமென கோரிக்கை வைத்தார்கள்.  ஆட்சிக்கு வந்தால் மீதமுள்ள ரூ.4000ஃ- வழங்கப்படும் என வாக்குறுதி அளித்தார்கள் அதனடிப்படையில் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றவுடன் குடும்ப அட்டைதாரர் அனைவருக்கும் ரூ.4000ஃ- வழங்கும் உத்தரவிற்கு முதல் கையெழுத்திட்டார்கள்.  முதல்கட்டமாக, ரூ.2000ஃ- வழங்கப்பட்டது.  தற்போது மீதமுள்ள ரூ.2000ஃ-ம் ஊரடங்கு காலத்தில் பொதுமக்களுக்கு தேவையான மளிகை தொகுப்பு பொருட்களும் இன்று முதல் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது.  தூத்துக்குடி மாவட்டத்தில் 960 நியாயவிலைக்கடைகளில் இணைக்கப்பட்டுள்ள 5,01,947 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு மொத்தம் ரூ.100.39 கோடி மதிப்பில் கொரானா நிவாரண உதவித்தொகையும், ரூ.20.20 கோடி மதிப்பில் 14 பொருட்களடங்கிய மளிகை தொகுப்பும் வழங்கப்படுகிறது.  இதன் மூலம் மக்களுக்கு ஊரடங்கு காலத்தில் சிரமமின்றி இருக்க தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார். 


   நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் (பயிற்சி) திரு.ஸ்ருதஞ்ஜெய் நாராயணன்,இ.ஆ.ப., கூட்டுறவு சங்கங்களின் இணைபதிவாளர் ரவிச்சந்திரன், மாவட்ட வழங்கல் அலுவலர் அப்துல் காசிம் முக்கிய பிரமுகர்கள் திரு.உமரி சங்கர், திரு.பில்லா ஜெகன், திரு.ராம ஜெயம், திரு.நவீன் குமார்;, வட்டாட்சியர் இசக்கி ராஜ் மற்றும் அலுவலர்கள் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்