டி.வி.எஸ். சீனிவாசன் அறக்கட்டளை சார்பில். கொரோனா நோயாளிகளுக்கு உதவும் வகையில் ரூ.25 லட்சம் மதிப்பில் 50 ஆக்சிஸன் செரிவூட்டிகள். வழங்கள்

             


                                                               சமூக நலன் மகளிர் உரிமை துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்களிடம் கொரோனா நோயாளிகளுக்கு உதவும் வகையில் டி.வி.எஸ். சீனிவாசன் அறக்கட்டளை சார்பில் ரூ.25 லட்சம் மதிப்பில் 50 ஆக்சிஸன் செரிவூட்டிகளை  வழங்கினார்கள்

-------------------------------

  தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் டி.வி.எஸ். சீனிவாசன் அறக்கட்டளை சார்பில் கொரோனா நோயாளிகளுக்கு உதவும் வகையில் ரூ.25 லட்சம் மதிப்பில் 50 ஆக்சிஸன் செரிவூட்டிகள் வழங்கும் நிகழ்ச்சி  இன்று (02.06.2021) நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாண்புமிகு சமூக நலன் மகளிர் உரிமை துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் ஆகியோரிடம் டி.வி.எஸ். சீனிவாசன் அறக்கட்டளை சார்பில் கள இயக்குநர்கள் திரு.சாமிநாதன், திரு.விஜயகுமார் ஆகியோர் வழங்கினார்கள். 

மாண்புமிகு சமூக நலன் மகளிர் உரிமை துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள் மருத்துவமனைகளுக்கு உடனடியாக கருவிகளை வழங்கி கொரோனா நோயாளிகளுக்கு பயன்படுத்திட உடன் நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ்.ஜெயக்குமார், இ.கா.ப., மாவட்ட வருவாய் அலுவலர் திரு.கண்ணபிரான் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர். 


வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், தூத்துக்குடி.

கருத்துகள்