முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வீட்டின் மேற்கூரையில் உட்புறம் பெயர்ந்து விழுந்ததில்; ஒரு பெண் உயிரிழப்பு - மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் நேரில் விசாரனை

 .   




      தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மேற்கூரையில் உட்புறம் கான்கீரீட் சிமெண்ட் பூச்சு நேற்று நள்ளிரவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது பெரிய அளவில் பெயர்ந்து விழுந்ததில்; ஒரு பெண் உயிரிழப்பு - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நேரில் பார்வையிட்டு விசாரணை.                                                               


                                                                                   தூத்துக்குடி வடபாகம் எல்லைக்கு உட்பட்ட .   கிரு ஷ்ணராஜபுரம் 7வது தெருவைச் சேர்ந்த வெள்ளைச்சாமி மகன் நடராஜன் என்பவருக்கு சொந்தமான காம்பவுண்டு உள்ளது. அதில் ஒரு வீட்டில் நடராஜன் குடும்பத்தார் வசித்து வருகின்றனர். இன்னொரு வீட்டில் ராஜமுருகன் என்பவர் தனது குடும்பத்துடன் 5 வருடங்களாக குடியிருந்து வருகிறார். இவர் தச்சு வேலை செய்து வருகிறார், இவருக்கு மீனாட்சி என்ற மனைவியும், பரமேஸ்வரி (22) என்ற மகளும், சுந்தர் (21) என்ற மகனும் உள்ளனர்.                                                    

ராஜமுருகன் குடியிருந்து வரும் வீட்டின் மேற்கூரை உட்புறம்  4 வருடங்களுக்கு முன்பு சேதமடைந்துள்ளது, அதை வீட்டின் உரிமையாளரான நடராஜன், கொத்தனார் மூலம் சிமெண்ட் வைத்து பூசி சீர் செய்திருக்கிறார். மேற்படி சிமெண்ட் பூச்சானது நேற்று நள்ளிரவில் ராஜமுருகன் குடும்பத்தார் நான்கு பேரும் தூங்கிக் கொண்டிருந்தபோது பெரிய அளவில் பெயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த ராஜமுருகன் மகள் பரமேஸ்வரி மற்றும மகன் சுந்தர் மீது விழுந்தது, அதில் படுகாயமடைந்த இருவரையும் உடனடியாக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், செல்லும் வழியில் பரமேஸ்வரி உயிரிழந்தார். படுகாயமடைந்த சுந்தருக்கு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகிறது. 

                                                                சம்பவம்றிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் உடனடியாக நள்ளிரவில் சம்பவ இடத்திற்கு நேரில் விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார்.  மேலும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள தூத்துக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் திரு. கணேஷ் அவர்களுக்கு உத்தரவிட்டார். 

இது குறித்து வடபாகம் காவல் ஆய்வாளர் திரு. அருள் வழக்குப்பதிவு செய்து, அவரது தலைமையில் உதவி ஆய்வாளர் திரு. சுந்தர் சிங், தனிப்பிரிவு தலைமைக் காவலர் திரு. நாகராஜன், இரவு ரோந்து போலீசார் உட்பட காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்