பத்திரிக்கை மற்றும் தொலைக் காட்சி கூட்டமைப்பு சார்பாக ஊரடங்கை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளுக்கு. நிவாரணப் தொகுப்புகள்

தூத்து.க்குடி மாவட்ட பத்திரிக்கை  மற்றும்  தொலைக் காட்சி கூட்டமைப்பு சார்பாக கொரோனா கால ஊரடங்கை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசிப்பை, காய்கறிகள்  மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய நிவாரணப் தொகுப்புகளை தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் முன்பு இன்று  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் வழங்கினார்.  

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் முன்பு கொரோனா கால ஊரடங்கை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட பத்திரிக்கை ரூ தொலைக்காடசி கூட்டமைப்பு சார்பாக இன்று (13.06.2021)  தூத்துக்குடி வசிக்கும் மாற்றுத்திறனாளிகள் 30 பேருக்கு அரிசிப்பை, காய்கறிகள் மற்றும் மளிகை பொருள்கள் அடங்கிய நிவாரணத் தொகுப்புகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. அதன்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரண பொருட்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். 



இதற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட பத்திரிக்கை ரூ தொலைக்காடசி கூட்டமைப்பு தலைவர் திரு. பிரான்சிஸ், செயலாளர் திரு. மார்க் மகேஷ், இணை செயலாளர் திரு. அண்ணாத்துரை, திரு. சாம்ராஜ், திரு. முத்துக்குமார், திரு. சுபாஷ், திரு. அந்தோணி ரொமான்ஸ், திரு. குணசிங், மற்றும் சின்னத்துரை அன் கோ மேலாளர் திரு. ஹரி ஆகியோர் செய்திருந்தனர்.


இந்நிகழ்ச்சியில் தென்பாகம் காவல் ஆய்வாளர் திரு. ஆனந்தராஜன், மத்தியபாகம் பொறுப்பு ஆய்வாளர் திரு. ராமகிருஷ்ணன், போக்குவரத்து பிரிவு காவல் ஆய்வாளர் திரு. செந்தில் சுரேஷ், உதவி அய்வாளர் திரு. வெங்கடேஷ் தனிப்பிரிவு தலைமைக் காவலர் திரு. சுப்பிரமணியன், உட்பட காவல்துறையினர் பலர் கலந்து கொண்டனர். 

கருத்துகள்