முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது மக்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு மக்களின் இல்லங்களை தேடி காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனை

 

                                                                தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்களின் இல்லம் தேடி 465 மெட்ரிக் டன் காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது - மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தகவல்

-------------------------------


கோவிட் - 19 இரண்டாவது அலை பெருந்தொற்றிலிருந்து, பொது மக்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு தமிழக அரசு 24.05.2021 முதல் தளர்வில்லாத பொது முடக்கம் அறிவித்துள்ளது. இதன்படி பொது முடக்கத்தின் போது அத்தியாவசிய தேவைகளில் காய்கறிகள், பழங்கள் இருப்பதால் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவரின் அறிவுரைகளின்படி, தோட்டக்கலைத்துறை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, வேளாண் விற்பனைத் துறை ஆகியவற்றின் கீழ் செயல்படும் உழவர் உற்பத்தியாளர்கள் குழுக்கள் மூலம் அனைத்து வட்டாரங்களிலும் காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரை பொது மக்களின் இல்லங்களை தேடி காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

வேளாண்மை துறையின் மூலம் 339 வாகனங்களிலும், தோட்டக்கலை துறையின் மூலம் 1178 வாகனங்களிலும், வேளாண்மை விற்பனைத் துறையின் மூலம் 161 வாகனங்களிலும், ஆக மொத்தம் 1678 வாகனங்கள் மூலம் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பொதுமக்களுக்கு இல்லம் தேடி 465 மெட்ரிக் டன் அளவிற்கு காய்கறிகள் மற்றும் பழங்கள்; விற்பனை செய்யப்பட்டது. 

நேற்றைய தினம் 268 வாகனங்களில் 63 மெட்ரிக் டன் காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனை செய்யப்பட்டது. வட்டார அளவில் காய்கறிகள் மற்றும் பழங்களை விற்பனை செய்வதற்கு மட்டுமின்றி விவசாயிகள் தாங்கள் விளைவித்த விளைபொருள்களை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்லவும், அண்டை மாநிலத்திற்கு எடுத்துச் செல்லவும் அனுமதி சீட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. இன்று வரை தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகமாக உற்பத்தி செய்யப்பட்ட வாழைப்பழங்கள் சுமார் 1800 மெட்ரிக் டன் கேரள மாநிலத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. 

மேலும் விபரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இதற்காக அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 0461 - 2340888 தொடர்பு கொள்ளவும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்