பொது மக்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு மக்களின் இல்லங்களை தேடி காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனை

 

                                                                தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்களின் இல்லம் தேடி 465 மெட்ரிக் டன் காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது - மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தகவல்

-------------------------------


கோவிட் - 19 இரண்டாவது அலை பெருந்தொற்றிலிருந்து, பொது மக்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு தமிழக அரசு 24.05.2021 முதல் தளர்வில்லாத பொது முடக்கம் அறிவித்துள்ளது. இதன்படி பொது முடக்கத்தின் போது அத்தியாவசிய தேவைகளில் காய்கறிகள், பழங்கள் இருப்பதால் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவரின் அறிவுரைகளின்படி, தோட்டக்கலைத்துறை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, வேளாண் விற்பனைத் துறை ஆகியவற்றின் கீழ் செயல்படும் உழவர் உற்பத்தியாளர்கள் குழுக்கள் மூலம் அனைத்து வட்டாரங்களிலும் காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரை பொது மக்களின் இல்லங்களை தேடி காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

வேளாண்மை துறையின் மூலம் 339 வாகனங்களிலும், தோட்டக்கலை துறையின் மூலம் 1178 வாகனங்களிலும், வேளாண்மை விற்பனைத் துறையின் மூலம் 161 வாகனங்களிலும், ஆக மொத்தம் 1678 வாகனங்கள் மூலம் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பொதுமக்களுக்கு இல்லம் தேடி 465 மெட்ரிக் டன் அளவிற்கு காய்கறிகள் மற்றும் பழங்கள்; விற்பனை செய்யப்பட்டது. 

நேற்றைய தினம் 268 வாகனங்களில் 63 மெட்ரிக் டன் காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனை செய்யப்பட்டது. வட்டார அளவில் காய்கறிகள் மற்றும் பழங்களை விற்பனை செய்வதற்கு மட்டுமின்றி விவசாயிகள் தாங்கள் விளைவித்த விளைபொருள்களை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்லவும், அண்டை மாநிலத்திற்கு எடுத்துச் செல்லவும் அனுமதி சீட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. இன்று வரை தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகமாக உற்பத்தி செய்யப்பட்ட வாழைப்பழங்கள் சுமார் 1800 மெட்ரிக் டன் கேரள மாநிலத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. 

மேலும் விபரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இதற்காக அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 0461 - 2340888 தொடர்பு கொள்ளவும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.



கருத்துகள்