தமிழ் எழுத்தாளர் திரு.கி.ரா. அவர்களுக்கு. சிலை அமைக்கவும் அவரது நினைவு போற்றும் வகையில் அரங்கம் அமைக்க இடம் தேர்வு செய்ய இன்று ஆய்வு
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டம் இடைசெவல் கிராமத்தில் மறைந்த தமிழ் எழுத்தாளர் திரு.கி.ரா. அவர்கள் படித்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை பழமை மாறாமல் புதுப்பித்தல் மற்றும் அரங்கம் அமைக்கும் இடம் தேர்வு செய்வது தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
-------------------------------
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டம் இடைசெவல் கிராமத்தில் மறைந்த தமிழ் எழுத்தாளர் திரு.கி.ரா. அவர்கள் படித்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை பழமை மாறாமல் புதுப்பித்தல் மற்றும் அரங்கம் அமைக்கும் இடம் தேர்வு செய்வது தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (09.06.2021) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மறைந்த தமிழ் எழுத்தாளர் திரு.கி.ரா. அவர்களுக்கு கோவில்பட்டியில் சிலை மற்றும் இடைசெவல் கிராமத்தில்; அவர் படித்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை பழமை மாறாமல் புதுப்பிக்கவும், அவரது நினைவினை போற்றும் வகையிலும், அவருடைய படைப்பாளுமையை வெளிப்படுத்தும் வகையிலும், அவரது புகைப்படங்கள், படைப்புகள் ஆகியவற்றை மாணவர்களும், பொதுமக்களும் அறிந்து கொள்ளும் வகையில் அரங்கம் அமைக்கவும் உத்தரவிட்டுள்ளார்கள்.
அதனடிப்படையில், மாண்புமிகு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் மாண்புமிகு சமூக நலன் மகளிர் உரிமை துறை அமைச்சர் அவர்கள் ஆகியோர் கடந்த வாரம் கோவில்பட்டியில் சிலை அமைப்பதற்கான இடத்தினை தேர்வு செய்துள்ளனர். இடைசெவல் கிராமத்தில் மறைந்த தமிழ் எழுத்தாளர் திரு.கீ.ரா. அவர்கள் படித்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பஞ்சாயத்து பொது நிதியில் இருந்து ரூ.20 லட்சம் மதிப்பில் பழமை மாறாமல் புதுப்பிக்கவும் மற்றும் அரங்கம் அமைப்பதற்கான இடத்தினை தேர்வு செய்வதற்கும் இன்று நேரில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அரங்கம் அமைப்பதற்கான இடத்தினை தேர்வு செய்து தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அரங்கம் மற்றும் சிலை அமைக்கவும், அவர் படித்த பள்ளியை பழமை மாறாமால் புதுப்பிக்கவும் தேவையான நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் திரு.கண்ணபிரான், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு.லட்சுமணன், கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் திரு.சங்கரநாராயணன், வட்டாட்சியர் திருமதி.அமுதா, பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி.மாரியம்மாள் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக