முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழ் எழுத்தாளர் திரு.கி.ரா. அவர்களுக்கு. சிலை அமைக்கவும் அவரது நினைவு போற்றும் வகையில் அரங்கம் அமைக்க இடம் தேர்வு செய்ய இன்று ஆய்வு

 



தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டம் இடைசெவல் கிராமத்தில் மறைந்த தமிழ் எழுத்தாளர் திரு.கி.ரா. அவர்கள் படித்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை பழமை மாறாமல் புதுப்பித்தல் மற்றும் அரங்கம் அமைக்கும் இடம் தேர்வு செய்வது தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

-------------------------------

 தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டம் இடைசெவல் கிராமத்தில் மறைந்த தமிழ் எழுத்தாளர் திரு.கி.ரா. அவர்கள் படித்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை பழமை மாறாமல் புதுப்பித்தல் மற்றும் அரங்கம் அமைக்கும் இடம் தேர்வு செய்வது தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (09.06.2021) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மறைந்த தமிழ் எழுத்தாளர் திரு.கி.ரா. அவர்களுக்கு கோவில்பட்டியில் சிலை மற்றும் இடைசெவல் கிராமத்தில்; அவர் படித்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை பழமை மாறாமல் புதுப்பிக்கவும், அவரது நினைவினை போற்றும் வகையிலும், அவருடைய படைப்பாளுமையை வெளிப்படுத்தும் வகையிலும், அவரது புகைப்படங்கள், படைப்புகள் ஆகியவற்றை மாணவர்களும், பொதுமக்களும் அறிந்து கொள்ளும் வகையில் அரங்கம் அமைக்கவும் உத்தரவிட்டுள்ளார்கள். 

அதனடிப்படையில், மாண்புமிகு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் மாண்புமிகு சமூக நலன் மகளிர் உரிமை துறை அமைச்சர் அவர்கள் ஆகியோர் கடந்த வாரம் கோவில்பட்டியில் சிலை அமைப்பதற்கான இடத்தினை தேர்வு செய்துள்ளனர். இடைசெவல் கிராமத்தில் மறைந்த தமிழ் எழுத்தாளர் திரு.கீ.ரா. அவர்கள் படித்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பஞ்சாயத்து பொது நிதியில் இருந்து ரூ.20 லட்சம் மதிப்பில் பழமை மாறாமல் புதுப்பிக்கவும் மற்றும் அரங்கம் அமைப்பதற்கான இடத்தினை தேர்வு செய்வதற்கும் இன்று நேரில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அரங்கம் அமைப்பதற்கான இடத்தினை தேர்வு செய்து தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அரங்கம் மற்றும் சிலை அமைக்கவும், அவர் படித்த பள்ளியை பழமை மாறாமால் புதுப்பிக்கவும் தேவையான நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் திரு.கண்ணபிரான், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு.லட்சுமணன், கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் திரு.சங்கரநாராயணன், வட்டாட்சியர் திருமதி.அமுதா, பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி.மாரியம்மாள் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்