கடல் அரிப்பை தடுக்க பெரியதாழையில் அமைக்கப்பட்டுள்ள தூண்டில் வளைவு பாலம் : நாடாளுமன்ற உறுப்பினர்: .கனிமொழி கருணாநிதி ஆய்வு
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வட்டம், பெரியதாழையில் கடல் அரிப்பை தடுக்க அமைக்கப்பட்டுள்ள தூண்டில் வளைவு பாலம் தற்போது கடலின் தென் பகுதியில் 360 மீட்டரும் வடபகுதியில் 270 மீட்டரும் தூண்டில் வளைவு பாலம் நீட்டிப்பு பணி 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பணிகளை மாண்புமிகு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் திரு : .கனிமொழி கருணாநிதி அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
___________________
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வட்டம், பெரியதாழையில் கடல் அரிப்பை தடுக்க அமைக்கப்பட்டுள்ள தூண்டில் வளைவு பாலம் தற்போது கடலின் தென் பகுதியில் 360 மீட்டரும் வடபகுதியில் 270 மீட்டரும் தூண்டில் வளைவு பாலம் நீட்டிப்பு பணி 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பணிகளை மாண்புமிகு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி அவர்கள் 06.06.2021 நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். ஆய்வின்போது மாண்புமிகு மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் மற்றும் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஊர்வசி எஸ்.அமிர்தராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் மாண்புமிகு நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி அவர்கள்
தூத்துக்குடி மாவட்டம் பெரியதாழையில் கடல் அரிப்பு பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணப்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் ரூ.30 கோடி மதிப்பீட்டில் தூண்டில் பாலம் நீட்டிப்பு பணி நடைபெற்று வருகிறது.; பெரியதாழை மீனவ மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான கடல் அரிப்பை தடுக்கவேண்டும். கடற்பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள படகுகளை பாதுகாப்பான இடத்தில் நிறுத்தப்படவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இன்றைய தினம் பெரியதாழை பகுதியில் கடல் அரிப்பு பகுதிகளை பார்வையிட்டுள்ளோம். மீனவ மக்களின் கோரிக்கையை நிரந்தர தீர்வு நிச்சயமாக காண நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு மாண்புமிகு நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் தெரிவித்தார்கள்.
இந்த ஆய்வின்போது திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் செல்வி.தனப்பிரியா, மீன்வளத்துறை இணை இயக்குநர் அமல்சேவியர், மீன்வளத்துறை உதவி இயக்குநர் திரு.விஜயராகவன், மீன்வளத்துறை செயற்பொறியாளர் திரு.கங்காதரன், மீன்வளத்துறை உதவி செயற்பொறியாளர் திரு.தயாநிதி, மீன்பிடித்தள உதவி செயற்பொறியாளர், திருமதி.வயலா, சாத்தான்குளம் வட்டாட்சியர் திரு.லெட்சுமி கணேஷ், முக்கிய பிரமுகர்கள்: உமரிசங்கர், எஸ்.ஜெ.ஜெகன், பாலமுருகன், ஜோசப், பொன்முருகேசன், எஸ்.பி.ஜே.சுந்தர ராஜன், பெரியதாழை பங்குதந்தை எஸ்.சுசீலன் மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக