முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வாழ்வாதாரம் இழந்து தவித்து வரும் நாட்டு புற கலைஞர்களுக்கு நிவாரணம் வழங்க. தமிழக முதல்வர் அவர்களிடம் கோரிக்கை

 


  கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை கட்டுப்படுத்தும் விதமாக மத்திய மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து ஊரடங்கு அமல்படுத்தி தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.                                                                                                                                                                                                                                     தற்போது தொடர்புகளை மாநில அரசு அறிவித்துள்ளது. வழிபாட்டுத் தலங்களுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் நகரம் மற்றும் கிராமங்களில் உள்ள கோயில்களில் திருவிழா நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. பங்குனி மாதம் சித்திரை மாதங்களில் துவங்கும் கோயில் திருவிழா ஆடி மாத இறுதிவரை பட்டி தொட்டி எங்கும் இடைவிடாமல் நடக்கும் இந்த திருவிழா நிகழ்ச்சிகள் மூலமாக நையாண்டி மேளம்,வில்லிசை,கரகாட்டம், மகுடாட்டம்,பந்தல் கலைஞர்கள்,ஒளி ஒலி பெருக்கி கலைஞர்கள், உட்பட பல்வேறு கலைஞர்கள் பயனடைவார்கள்.                                                                                                                                இந்த கொரானா விதிமுறையால் நாட்டுப்புற கலைஞர்கள் நிகழ்ச்சி இல்லாமல்,வருமானம் இல்லாமல்,வறுமையில் சிக்கி வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகிறார்கள், இந்த கலைஞர்களுக்கு சென்ற வருடம் ஊரடங்கும் போது தமிழக அரசின் நிவாரண தொகை 2 ஆயிரம் வழங்கியது ஆனால் அந்தத் தொகையும் காணாதது, இந்த வருடமும் நிவாரண தொகை வழங்கும் வங்கிகள் மூலம் நீண்ட நாள் கடன் தொகையாக ரூபாய் ஒரு லட்சம் வழங்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்,
 

                                                                                    பங்குனி மாதம் முதல் பல்வேறு நகரம் கிராமங்கள் உட்பட பட்டி தொட்டிகளில் எல்லாம் திருவிழா நிகழ்ச்சிகள் களை கட்டும் ஆனால் இதன் மூலம் கரகாட்டம்.வில்லிசைக் கலைஞர்கள் என பல்வேறு கலைஞர்கள் பயன்பெறுவார்கள்.                                                                                                        ஆனால்  சென்ற  ஆண்டும் இதே போல் கொரோனா நோய் தொற்றால் நிகழ்ச்சிகள் அனைத்தும் தடைபட்டது. இதனால் கலைஞர்கள் அனைவரும் வட்டிக்கு பணம் வாங்கி அதை வைத்து பிழைப்பு நடத்தினார்கள். அதேபோல் இந்த ஆண்டும் வட்டிக்கு பணம் பெற்று பிழைப்பு நடத்தும் ஒரு நிலைமை உருவாகி இருக்கிறது. ஆகையால் இந்த ஆண்டு நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் சென்ற வருடம் இந்த கலைஞர்களுக்கு வழங்கி நிவாரணத்தொகை போல் இந்த வருடமும் நிவாரணத்தொகை கூடுதல் வழங்கிட தமிழக முதல்வர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வங்கிகள் மூலம் நீண்டநாள் கடன் வழங்கவும் தமிழக முதல்வர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்  தமிழ் பண்பாடு மேம்பாட்டு மையம் & தமிழன்டா கலைக்கூடம், சார்பில்   இவ்வாறு கோரிக்கை வைத்துள்ளார் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்