முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஆன் லைன் ரம்மி விளையாடுவது குடும்பத்தையே சீர்குலைத்துவிடும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் அறிவுரை


ஆன் லைன் ரம்மி விளையாடுவது குடும்பத்தையே சீர்குலைத்துவிடும் காவல் துறை காளிப்பாளர் . எஸ். ஜெயக்குமார் அவர்கள் அறிவுரை.


இன்று தூத்துக்குடி 3வது மைல் ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் ஆயுதப்படை காவலர்களுக்கு ஆன்லைன் ரம்மி விளையாடுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், விளையாடுவதை தவிர்க்க வேண்டும் எனவும், கொரோனா வைரஸ் தாக்கத்திற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி சிறப்புரையாற்றினார். 


இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேசுகையில் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருவதால், அதன் தாக்கம் அதிகரித்து உயிரிழப்புகள் அதிகமாக உள்ளது. இதற்கு மாற்று வழி தடுப்பூசிதான், இந்த நேரத்தில் அனைவரும் தடுப்பூசி போடவேண்டும் என்பது அரசின் நோக்கம், தடுப்பூசி போட்டவர்களுக்கு அவ்வளவு எளிதாக கொரோனா தொற்று வருவதில்லை, அப்படியே தடுப்பூசி போட்டவர்களுக்கு வந்தால் கூட  உயிரிழப்பு ஏற்படுவதில்லை.  தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறையினர் அனைவரும் தடுப்பூசி போட்;டுக்கொள்ள வேண்டும். பணிக்கு செல்லும்போது  முகக் கவசம் அணிந்து கொள்ள வேண்டும், 2 முககவசங்கள் அணிந்து கொள்வது சிறந்தது,  அடிக்கடி கைகளை கிருமி நாசினி மற்றும் சோப்பு போட்டு சுத்தம் செய்து கொள்ள வேண்டும், சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும,; மேலும் உங்கள் வீட்டில் உள்ளவர்களையும் தடுப்பூசி போட்டுக்கொள்ள அறிவுறுத்தவும். பணி முடிந்து வீட்டிற்கு செல்லும் போது குளித்துவிட வேண்டும் ஏனென்றால் உங்கள் மூலம் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு தொற்று ஏற்பட அதிக வாய்ப்புள்ளது என்றும், இவற்றை சில காலங்கள் நாம் கடைபிடித்தால் தான் கொரோனா வைரஸை வெல்ல முடியும் என்றும், மேலும் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது கண்டிப்பாக தலைக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் என்றும், முக்கியமாக ஆன்லைன் ரம்மி விளையாடுவதை தவிர்க்க வேண்டும் ஆன்லைனில் பணத்தை இழந்து சில காவல்துறையினர் தற்கொலை செய்து கொள்வது நடந்து வருகிறது இதனால் ஆன்லைன் ரம்மி  விளையாட வேண்டாம், தயவு செய்து நல்ல பழக்க வழக்கங்களை மேற்கொள்ளுங்கள், புத்தகம் படியுங்கள் உங்களது நேரத்தை நல்ல வழியில் செலவிடுங்கள் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் அறிவுரைகள் வழங்கினார். 


 இதில் தூத்துக்குடி குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு  காவல்துறை கூடுதல்  கண்காணிப்பாளர் திரு. கோபி, தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் திரு. கணேஷ், ஆயுதப்படை காவல் ஆய்வாளர் திரு. செந்தாமரைகண்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் உடனிருந்தனர். 

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்