தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய திருவிழா தொடர்பான ஆலோசனைக்கூட்டம்

 


தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய திருவிழா தொடர்பான ஆலோசனைக்கூட்டம்  மாண்புமிகு சமூக நலன் - மகளிர் உரிமை துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்றது

-----------------------


தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய திருவிழா தொடர்பான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாண்புமிகு சமூக நலன் - மகளிர் உரிமை துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள் தலைமையில் இன்று (22.07.2021) நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஐ;., இ.ஆ.ப. அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ்.ஜெயக்குமார், இ.கா.ப., பிஷப் ஸ்டீபன் அந்தோணி, மாவட்ட வருவாய் அலுவலர் திரு.கண்ணபிரான் மற்றும் ஆலய கமிட்டி உறுப்பினர்கள் பங்கேற்றனர்.


இக்கூட்டத்தில் மாண்புமிகு சமூக நலன் - மகளிர் உரிமை துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள் தலைமையில், தூய பனிமய மாதா பேராலய திருவிழா, கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் எவ்வாறு நடத்துவது என்பது குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது. 

மாண்புமிகு சமூக நலன் - மகளிர் உரிமை துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள் தெரிவித்ததாவது:

நம்முடைய மேதகு ஆயர் அவர்கள் நமது தூத்துக்குடி நகரில் அமையபெற்றுள்ள தமிழகத்தில் உள்ள 4 பெசிலிக்காவில் ஒரு பெசிலிக்காக இருக்கக்கூடிய பனிமய மாதா ஆலயத்துடைய திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 5ம் தேதி சிறப்பாக உலக அளவில் பக்தர்கள் அதிக அளவில் கலந்துகொள்வார்கள். கொடியேற்றம் அன்று லட்சக்கணக்கானோர்கள் கலந்துகொள்வார்கள். கொரோனா தொற்றில் இருந்து இ;ந்த திருவிழா நடத்தாத நிலையில் இருந்து இந்த ஆண்டு ஊரடங்காக இருப்பதால் ஆலயங்களில் ஒருசில தளர்வுகள் வழங்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகிறது. அதனால் இத்திருவிழாவில் முறைப்படி எல்லா ஆராதனைகளும் நடைபெறும். ஆனால் மக்கள் பங்கேற்பின்றி நடைபெறும். சப்பர பவனி உள்ளிட்டவைகள் நடைபெறாது. மக்கள் பங்கேற்பின்றி கொடியேற்றம் உள்ளிட்ட எல்லா நிகழ்வுகளும் நடைபெறும். இந்நிகழ்வுகள் அனைத்தும் உள்ளுர் தொலைக்காட்சி மற்றும் யூடியுப் சேனல்கள் மூலம் நான் அனைவரும் நேரயாக ஆராதனைகளில் பங்பேற்று கொள்ளலாம் என ஆயர் அவர்கள் அறிவித்துள்ளார்கள். நமது அரசம் கொரோனா தொற்றை தடுக்கும் வகையில் சில தளர்வுகளை அறிவித்துள்ளது. மக்கள் அனைவரும் பனிமய மாதா அன்னையை வணங்கலாம், தரிசிக்கலாம், ஆனால் திருவிழா நிகழ்வுகள் மக்கள் பங்கேற்பின்றி நடைபெறும் என தெரிவித்தார். 

பின்னர் திருவிழா நடத்துவது தொடர்பாக பிஷப் ஸ்டீபன் அந்தோணி அவர்கள் தெரிவித்ததாவது:

தூய பனிமய மாதா பேராலய திருவிழா இந்த ஆண்டு 26.07.2021 திங்கட்கிழமை அன்று கொடியேற்றத்துடன் பனிமய தாயின் திருவிழா தொடங்கி 05.08.2021 வியாழன் அன்று நிறைவு பெறும். இந்த ஆண்டு திருவிழாவில் கொரோனா ஊரடங்கின் காரணமாக அரசின் அறிவுறுத்தலின்படி இந்த ஆண்டு கொடி பவனி, நற்கருணை பவனி, சப்பர பவனி ஆகியவை நடைபெறாது. திருவிழா நாட்களில் வழக்கமாக பேராயலத்தின் அனுமதியோடு நடத்தப்படும் கடைகளும், பொருட்காட்சியும் இந்த ஆண்டு நடத்தபடாது. 26.7.2021 திங்கட்கிழமை அன்று காலை கொடியேற்ற வைபவம் மக்கள் பங்கேற்பு இன்றியே நடைபெறும். அடுத்த 10 நாட்களும் பேராலயத்தின் உள்ளே வழக்கமாக காலையில் நடைபெறும் திருப்பயண திருப்பலிகள், மாலையில் நடைபெறும் அருள் உரை, அருள் இரக்க ஆசீர், இரவில் நடைபெறும் நற்கருணை ஆசிர் ஆகியன மக்கள் பங்றே;பு இன்றி நடைபெறும். வருகின்ற மக்களும் முககவசம், சமூக இடைவெளியை பின்பற்றி நடைபெறும். மக்கள் பங்கேற்கும் நோக்குடன் வரும்பொழுது காலை திருப்பயண திருப்பலிகளில் பங்கேற்கும் மக்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. பேராலயத்தில் வழிபாடுகள் நடத்தப்படாத நேரத்தில் பேரலாயம் திறந்தே இருக்கும். மக்கள் அரசின் கட்டளைககுள்கு உட்பட்டு தனித்தனியாக வந்து தங்களது வழிபாட்டினை நடத்திக்கொள்ளலாம். பெருவிழாவின் முக்கியமான நினைவுகள் அனைத்தும் சூரியா தொலைக்காட்சி, அற்புதம் ஏசு தொலைக்காட்சி, விண்மீன் மியுசிக் தொலைக்காட்சி, கொற்கை தொலைக்காட்சி, சுனோஸ் பசுபிகா யூடியுப் சேனல் ஆகியவற்றின் நேரலையில் ஒளிபரப்பப்படும். எனவே இந்த ஆண்டு தமிழக அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றி பனிமய தாயின் பெருவிழாவை கொண்டாட வேண்டும் எனவும், பெரும்பாலான நிகழ்வுகள் தொலைக்காட்சி வாயிலாகவே திருப்பலியில் பங்கேற்று பயன்பெற உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்தார்.

கூட்டத்தில் தூய பனிமய மாதா ஆலய பங்குதந்தை குமாரராஜா, கோவில் கமிட்டி உப தலைவர் திரு.அர்ட்லி, செயலாளர் திரு.கென்னடி, பொருளாளர் திரு.ஜாகீர்கோச் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், தூத்துக்குடி. 

கருத்துகள்