அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை : தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தகவல்

 


 தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் ஆண்டுதோறும் செயற்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ் 2021-22ஆம் ஆண்டிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. என மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப.,அவர்கள் தகவல்.

---------------------

    தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்¤த் துறையின் சார்பில் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் ஆண்டுதோறும் செயற்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ் 2021-22ஆம் ஆண்டிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 


விண்ணப்பிக்கத் தகுதிகள்  


    உதவித்தொகை பெற விண்ணப்பிப்பவர்கள் 01.01.2021 அன்று 58 வயது நிறைவடைந்தவர்களாக இருக்க வேண்டும். தமிழ்ப்பணி ஆற்றிய ஆதாரங்களுடன் ஆண்டு வருமானம் ரூ.72000-க்கு மிகாமல் வட்டாட்¤யரிமிருந்து இணையவழியில் (ஆன்லைன்) பெறப்பட்ட வருமானச் சான்று, தமிழறிஞர்கள் இருவரிடமிருந்து தகுதிநிலைச்சான்று மற்றும் இதர விவரங்களுடன் தூத்துக்குடி மாவட்டத் தமிழ் வளர்ச்¤த் துணை இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பங்களை அளிக்க வேண்டும்.                                       இந்தத்தொகைக்கான       விண்ணப்பங்களை தூத்துக்குடி மாவட்ட ஆட்¤யர் அலுவலகத்தில் அமைந்துள்ள தமிழ் வளர்ச்¤த் துணை இயக்குநர் அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம் அல்லது தமிழ்வளர்ச்¤த் துறையின் வலைதளத்தில் இருந்து இலவசமாகப்          (www.tamilvalarchithurai.com)  பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இத்திட்டத்தின்கீழ் தெரிவு செய்யப்படுபவருக்கு திங்கள்தோறும் உதவித்தொகையாக ரூ.3500- மருத்துவப்படி ரூ.500- அவரின் வாழ்நாள் முழுவதும் வழங்கப்படும். நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை தூத்துக்குடி மாவட்ட ஆட்¤யர் அலுவலகத்தில் அமைந்துள்ள தமிழ் வளர்ச்சித் . துணை இயக்குநர் அலுவலகத்தில் 31.08.2021க்குள் அளிக்கப்பட வேண்டுமென மாவட்ட ஆட்¤த்தலைவர் மரு. கி. செந்தில்ராஜ் இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.



கருத்துகள்