முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

திருச்செந்தூர் பேரூராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் ஆய்வு.



தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் பேரூராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

----------------------------

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் திருச்செந்தூர் பேரூராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் ஆய்வுக்கூட்டம் இன்று (07.07.2021) நடைபெற்றது.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள்பேசியதாவது:

         



                                                           திருச்செந்தூர் பேரூராட்சிக்கென குரங்கணி அருகில் தாமிரபரணி ஆற்றில் இருந்து குடிநீர் கொண்டு வரும் தனி குடிநீர் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இத்திட்டத்தின் மூலம் தினசரி 2.10 எம்எல்டி நீர் திருச்செந்தூருக்கு வழங்கப்பட்டு வருகிறது. கூடுதலாக இப்பகுதியில் இருந்து 3 எம்எல்டி குடிநீர் எடுக்கும் வகையில் புதிய குடிநீர் திட்ட வரைவு ஒன்று தயார் செய்ய வேண்டும்.                                                                                                                                                                    மேலும் திருச்செந்தூர் பேரூராட்சி பகுதியில் உள்ள 11000 வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது 7000; குடியிருப்புகளுக்கு மட்டுமே குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள அனைத்து குடியிருப்புகளுக்கும் வீட்டு குடிநீர் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் திருச்செந்தூரில் செயல்படுத்தப்பட்டு வரும் பாதாள சாக்கடை திட்டத்தில் குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்களையும் இணைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். திருச்செந்தூர் பகுதியில் பெறப்படும் குப்பைகளை திடக்கழிவு மேலாண்மை கிடங்கிற்கு கொண்டு செல்ல 10 வாகனங்கள் வாங்கிட கருத்துருக்களை உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும். திருச்செந்தூர் பேரூராட்சி பகுதியை தூய்மையாக பராமரிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் திருச்செந்தூர் பேரூராட்சியில் தேவையான அடிப்படை வசதிகள் குறித்து திட்ட வரைவுகளை தயார் செய்து அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவித்தார்.

கூட்டத்தில் உதவி ஆட்சியர் (பயிற்சி) திரு.ஸ்ருதயஞ் ஜெய் நாராயணன், இ.ஆ.ப., திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் திருமதி.கோகிலா, பேரூராட்சிகள் மண்டல உதவி இயக்குநர் திரு.சேதுராமன், செயற்பொறியாளர் திருமதி.ஜெகதீஸ்வரி, உதவி செயற்பொறியாளர் திரு.வாசுதேவன், ஏரல் வட்டாட்சியர் திரு.இசக்கிராஜ், பேரூராட்சி செயல் அலுவலர்கள் திருச்செந்தூர் திரு.ஆனந்தன், ஏரல் திரு.முருகன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்