முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கடைகளில் இனி புகையிலை, பான்பராக், விற்பனை இல்லை...* *தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு முடிவு.....*

 


  *கடைகளில் இனி புகையிலை, பான்பராக், விற்பனை இல்லை...*

*தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு முடிவு.....*

-------------------------------

தூத்துக்குடி மத்திய மாவட்டம் தெற்கு காவல் நிலையம் அருகில் வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் புகையிலை மற்றும் பான்பராக் பொருட்கள் விற்பனை செய்வதில்லை என்ற உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி இன்று காலை 9 மணியளவில் மாநில துணை தலைவர் வெற்றிராஜன் தலைமையில் நடைபெற்றது.


ஒவ்வொரு ஆண்டும் மே 31 உலக புகையிலை ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதை முன்னிட்டு தூத்துக்குடி தெற்கு காவல்நிலையம் அருகில் இன்று காலை 9 மணியளவில் வியாபாரிகள் சங்கத்தின் சார்பாக புகையிலை மற்றும் பான்பராக் பொருட்களை இனி ஒருபோதும் கடைகளில் விற்பனை செய்வதில்லை என்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் முன்னிலையில் வியாபாரிகள் சங்கத்தில் உள்ள உறுப்பினர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். பான்பராக், புகையிலை விற்பனை செய்வதில்லை என்ற உறுதிமொழி கோஷத்தை எழுப்பினார்கள். வஉசி மார்க்கெட்டை மீட்டெடுத்த அமைச்சருக்கு வியாபாரிகள் சங்கங்கள் சார்பாக நன்றிகளை தெரிவித்தனர்.


அப்போது அமைச்சர் கூறுகையில் மாநில தலைவர் விக்ரமராஜா கேட்டுக்கொண்டதின் பேரில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாகவும் வியாபாரிகள் சங்கத்தின் இந்த முடிவை வரவேற்பதாகவும், புகையிலை மற்றும் பான்பராக் ஆகியவற்றை பயன்படுத்துவதன் மூலம் ஏற்படும் தீமைகளை பற்றி  தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று வியாபாரிகள் சங்கத்திடம் கேட்டுக்கொண்டார். மாவட்ட கண்காணிப்பாளர் ஜெயக்குமார், டிஎஸ்பி கணேஷ், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மத்திய மாவட்ட தலைவர் சோலையப்பராஜா, மற்றும் வணிகர் சங்கங்களின் உறுப்பினர்கள்,கடை வியாபாரிகள்,கடை உரிமையாளர்கள், ஆகியோர் கலந்து கொண்டனர். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்