முத்தமிழ் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 98 - வது பிறந்தநாளை முன்னிட்டு கீழநத்தம் ஊராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா 27-07-2021 செவ்வாய்க்கிழமை அன்று ,திருநெல்வேலி கேடிசி நகர் சமுதாயக்கூடத்தில் நடைபெற்றது
இந்த நிகழ்ச்சியில் பாளை தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் கே.எஸ். தங்கப்பாண்டியன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நல திட்டஉதவிகளை வழங்கினார்
பாளை மத்திய ஒன்றிய திமுக செயலாளர் போர்வெல் எஸ். கணேசன் அவர்கள் முன்னாள் பாளை ஒன்றிய சேர்மன் எம். ஏ.கனகராஜ் அவர்கள்,முன்னாள் மாவட்ட கவுன்சிலர் அண்ணன் பரமசிவ அய்யப்பன் ஆகியோர் கலந்து கொண்டு விழாவினைசிறப்பித்தார்கள்.
மேலும்மாவட்ட சார்பு அணி அமைப்பாளர்கள் , ஒன்றிய பொறுப்பு குழு உறுப்பினர்கள், ஒன்றிய சார்பு அணி அமைப்பாளர்கள் , கிளை கழக செயலாளர்கள் , கிளை கழக நிர்வாகிகள் ,கழக உடன்பிறப்புகள், பொதுமக்கள் அனைவருக்கும் மற்றும் இந்த நிகழ்ச்சிக்கு பெரிதும் ஒத்துழைப்பும் - நலத்திட்ட பொருள்கள் வழங்கி உதவிய அனைத்து கேடிசி நகர் நிர்வாகிகளுக்கும் நெல்லை கிழக்கு மாவட்டம் பாளை ஒன்றியம் கீழ நத்தம் ஊராட்சி திமுக கிளை கழகங்கள் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகளைதெரிவிக்கப்பட்டது
மேலும்இந்த நிகழ்ச்சியை மிக சிறப்பாக ஏற்பாடு செய்த கேடிசி நகர் வடக்கு பகுதி கிளைச் செயலாளர் மாரிசாமி அவர்களுக்கும், கேடிசி நகர் தெற்கு பகுதி கிளை செயலாளர் எஸ். முகமது இலியாஸ் அவர்களுக்கும் நன்றிகள் தெரிவிக்கப்பட்டது.
கருத்துகள்
கருத்துரையிடுக