31 7 2021 சனிக்கிழமை நெல்லை மாவட்டம் கீழநத்தம் பஞ்சாயத்து கேடிசி நகர் சமுதாய நலக் கூடத்தில் கொரோனா தடுப்பு ஊசி முகாம் நடைபெற்றது . ...
இந்த தடுப்பூசி முகாமில் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என அப்பகுதி மக்களுக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது . .
இந்த தடுப்பூசி முகாமில் 116 பேர்கள் தன்னார்வத்தோடு கலந்துகொண்டு தடுப்பூசி போட்டுக் கொண்டனர் இந்த முகாமிற்கு நத்தம் மருத்துவ அலுவலர் மாரி பாஸ்கர் , சுகாதார ஆய்வாளர் புகாரி மற்றும் செவிலியர்கள் தடுப்பூசி பணியில் சமூக அக்கறையோடு ஈடுபட்டனர்.
மேலும் நோய் தொற்று பரவாமல் இருக்கவும் நோய் தோற்று இப்பகுதி மக்களை பாதிக்காமல் இருக்கவும் , மக்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தி பொதுநல சிந்தனையோடு இந்த தடுப்பூசி முகாமை சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு வழங்கும் வகையில் கேடிசி நகர் தெற்கு பகுதி திமுக செயலாளர் எஸ் முகமது இலியாஸ் கேடிசி நகர் வடக்கு கிளை செயலாளர் எஸ். மாரிச்சாமி அருணாசலபுரம் கிளை செயலாளர் பாஸ்கர் மற்றும் திலீப் ரஹ்மான் எஸ்.அப்துல் ரவூப் ஆகி யோர் அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்திருந்தார்கள்
கருத்துகள்
கருத்துரையிடுக