முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

புதுக்கோட்டை குளத்தினை தூர்வாரி ஆழப்படுத்தும் பணி துவக்கி வைப்பு : மேலும், திருச்செந்தூர் வட்டம் உடன்குடி, அடைக்கலாபுரம் பகுதியில் கருப்பட்டி, பனங்கற்கண்டு தயாரிக்கும் இடத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு .



தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை குளத்தினை தூர்வாரி ஆழப்படுத்தும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில் ராஜ், இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்தார். மேலும், திருச்செந்தூர் வட்டம் உடன்குடி, அடைக்கலாபுரம் பகுதியில் கருப்பட்டி, பனங்கற்கண்டு தயாரிக்கும் இடத்தினையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

-------------------------

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை குளத்தினை வீனஸ் ஹோம் அப்ளையன்சஸ் மற்றும் தொழில் நிறுவனத்தின் மூலம் குளத்தினை தூர்வாரி ஆழப்படுத்தும் பணிகள் துவக்க நிகழ்ச்சி இன்று (03.08.2021) நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில் ராஜ், இ.ஆ.ப., அவர்கள் கலந்துகொண்டு குளத்தினை தூர்வாரி ஆழப்படுத்தும் பணிகளை துவக்கி வைத்து பார்வையிட்டார்.                                                                                                                                                                                                              


தொடர்ந்து கருங்குளம் ஊராட்சி ஒன்றியம் வல்லநாடு பேருந்து நிலையம் அருகில் பொது கழிப்பறை கட்டுவதற்கான இடத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டார். 

               .                              


அதனைத்தொடர்ந்து எட்டயபுரம் வட்டம் கன்னகட்டை ஊராட்சி வெ.தளவாய்புரத்தில் பொதுமக்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கன்னகட்டை ஊராட்சியில் மக்கள் 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பாராட்டி, பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டாலும், வெளியிடங்களுக்கு செல்லும்போது முககவசம் அணிய வேண்டும் எனவும், சமூக இடைவெளியை கடைபிடித்து மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என பொதுமக்களிடம் தெரிவித்தார். 

                                                                                                                                                       



தொடர்ந்து, திருச்செந்தூர் வட்டம் உடன்குடி மற்றும் அடைக்கலாபுரத்தில் கருப்பட்டி மற்றும் பனங்கற்கண்டு தயாரிக்கும் இடத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு கருப்பட்டி மற்றும் பனங்கற்கண்டின் தரத்தினை ஆய்வு செய்தார். அப்போது, கருப்பட்டி மற்றும் பனங்கற்கண்டு தயாரிப்பதற்கு தேவையான உதவிகள் அனைத்தும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் செய்து தரப்படும் என தெரிவித்தார். 

நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர்கள் திரு.சிவசுப்பிரமணியன் (தூத்துக்குடி), செல்வி.கோகிலா (திருச்செந்தூர்), மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மரு.மாரியப்பன்,  வட்டாட்சியர்கள் திரு.ஜஸ்டின் (தூத்துக்குடி), திரு.கோபாலகிருஷ்ணன் (ஸ்ரீவைகுண்டம்), திரு.முருகேசன் (திருச்செந்தூர்), திரு.அய்யப்பன் (எட்டயபுரம்), கோவில்பட்டி சுகாதார பணிகள் துணை இயக்குநர் மரு.அனிதா, உணவு பாதுகாப்பு அலுவலர் திரு.சக்திமுருகன், கருங்குளம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திருமதி.பாக்கியலீலா, திருமதி.செல்வி, கருங்குளம் ஒன்றியக்குழு தலைவர் திருமதி.கோமதிராஜேந்திரன், வட்டார மருத்துவ அலுவலர் மரு.ராஜ்குமார், வட்டார மருத்துவ அலுவலர்(பொறுப்பு) மரு.அருண்விஸ்வநாத், வட்டார வளர்ச்சி அலுவலர் திருமதி.பானு, கன்னகட்டை ஊராட்சி மன்ற தலைவர் திரு.சீனிவாசன், வீனஸ் ஹோம் அப்ளையன்சஸ் இயக்குநர் திரு.முரளிகணேசன், மிர்ச்சல் மோதா சேர்மன் சி.ஐ.ஐ. தூத்துக்குடி, மேலாண்மை இயக்குநர் சகாய மாதா சால்டர்ன்;ஸ், சகாயராஜ் இன்டஸ்ரீஸ் இயக்குநர் திரு.சகாய்  மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர். 


.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்