02-08-2021. திங்கள் கிழமை அன்று மாலை தூத்துக்குடி முத்தையாபுரம் அருகிலுள்ள ராஜீவ் நகர் பகுதிகளில், வாழும் உப்பள தொழிலாளர்கள் அவர்களின் குழந்தைகளுக்கு , தூத்துக்குடி அகிலாண்டபுரம் பாஞ்சாலங்குறிச்சி செங்கமலம் இராஜகோபாலன்கோசாலையின் சார்பாக இலவச நோட்டுகள் வழங்கப்பட்டன. இதில் ஐம்பதிற்கும் மேற்ப்பட்ட பள்ளி குழந்தைகள் பயனடைந்தனர். மேலும் இந்நிகழ்சியில் சிறப்பு அழைப்பாளராக உயர்திரு விஜயன் அவர்கள் செந்தில் ஆண்டவர் அறக்கட்டளையின் சார்பில் கலந்து கொண்டு பள்ளி மாணவர் மாணவியருக்கு நோட்டுகள் வழங்கினார்கள். கோசாலையின் சார்பாக அதன் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை அப்பகுதியின் P.செளந்திரராஜன் அவர்கள் ஏற்பாடு செய்தார்.
இந்நிகழ்ச்சியில் பங்கு பெற்ற குழந்தைகள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன
கருத்துகள்
கருத்துரையிடுக