சமூக நீதி மற்றும் கிராம விழிப்புணர்வு கூட்டம். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.




தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்;லைக்குட்பட்ட நாட்டார்குளம் சூசையப்பர் கோவில் வளாகத்தில் வைத்து சமூக நீதி மற்றும் கிராம விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.




தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்;லைக்குட்பட்ட நாட்டார்குளம் சூசையப்பர் கோவில் வளாகத்தில் வைத்து ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. வெங்கடேசன் அவர்கள் முன்னிலையில் சமூக நீதி மற்றும் கிராம விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் இன்று (06.08.2021) நடைபெற்றது.



அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பளார் அவர்கள் பேசும்போது இந்த கிராம விழிப்புணர்வு கூட்டம் கடந்த சில மாதங்களாக ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று, அப்பகுதியில் உள்ள கிராம மக்கள் மற்றும் இளைஞர்களிடையே ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். காவல்துறை எப்போதும்  உங்கள் நண்பqர்கள் தான், உங்கள் ஊரில் சிறு சிறு பிரச்சனைகள் வந்தால், அதை உடனடியாக காவல்துறைக்கு தகவல்  தெரிவித்தால், அதை உடனடியாக  நிவர்த்தி செய்;ய்படும்.                                                                                                                                                            தூத்துக்குடிழுவதும்டிழுவதும் ஆய்வாளர்கள் உதவி ஆய்வாளர்கள் அந்தந்த கிராமங்களுக்குச் சென்று இந்த கிராம விழிப்புணர்வு கூட்டம் நடத்தி, கிராமத்தில் உள்ள பிரச்சனைகள் மற்றம் குறைகளை கேட்டறிந்து, அவற்றை நிவர்த்தி செய்து வருகின்றனர். இந்த சமூக நீதி விழிப்புணர்வு முகாம் என்பது உங்கள் பகுதியில் உள்ள அனைவரும் ஏற்றத்தாழ்வின்றி சமம் என்பதையும், சட்டங்கள் அனைவருக்கும்  பொதுவானவை என்பது குறிப்பிடுவதாகும். இவற்றைப் பற்றி தெரிந்துகொள்ள கல்வியறிவு என்பது மிக முக்கியமானதாகும், உங்கள் பகுதியில் உள்ளவர்கள் அனைவரும் கல்லூரி படிப்பு வரை படித்து பட்டம் பெற்றிருக்கிறார்கள் என்றால்,  அதுதான் சமூக நீதி, பள்ளிப்படிப்போடு நிறுத்தி விடாமல் பட்டப்படிப்பு வரை படிக்க வேண்டும், குறிப்பாக பெண்களும் பட்டப் படிப்பு வரை படிக்க வேண்டும் அதற்கான சலுகைகள் மற்றும் வாய்ப்புகள் எல்லா இடங்களிலும்  கிடைக்கிறது. மேலும் இளைஞர்கள் போதை பழக்க வழக்கங்களுக்கு அடிமையாவதால் குற்ற செயல்களில் ஈடுபட்டு அவர்களின் எதிர்காலம் மிகவும் பாதிக்கப்படுகிறது. எனவே இளைஞர்கள் இது போன்ற தீய பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகாமல் சிறந்த முறையில் கல்வி கற்று சமுதாயத்தில் சிறந்தவர்களாக திகழவேண்டும் என்று கூறினார். 


மேலும் தற்போது கொரோனா தொற்று மூன்றாம் அலை பரவி வரும் சூழ்நிலை உள்ளதால் அரசு அறிவித்துள்ள கொரோனா தடுப்பு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். பொதுமக்கள் அனைவரும் முககவசம் அணிய வேண்டும், முக்கவசம் அணியும் போது வாயையும் மூக்கையும் நன்றாக மூடியவாறு அணிய வேண்டும், அதிலும் 2 முகக்கவசம் அணிவது மிகவும் நல்லது. சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், அடிக்கடி கைகளை சோப்பு மற்றும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும், 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும், கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு அரசு அறிவித்துள்ள நெறிமுறைகளை கடைபிடித்து ஒத்துழைப்பு வழங்கி நம்மை நாமே காப்பாற்றி கொள்ள வேண்டும் என்று விழிப்புணர்வு வழங்கி சிறப்புரையாற்றினார்.


பின்னர் கிராம மக்கள் 100 பேருக்கு வேஷ்டி, சேலைகள், 50 பேருக்கு அரிசிப்பை மற்றும் பள்ளி குழந்;தைகள் 50 பேருக்கு அறிவை வளர்க்க கூடிய பொது அறிவு புத்தகங்கள் ஆகியவற்றை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வழங்கினார். 

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நாட்டார்குளம் அருட்திரு. அம்புரோஸ் மற்றும் ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. வெங்கடேசன் ஆகியோர் செய்திருந்தனர். இந்நிகழ்ச்சியில் செய்துங்கநல்லூர் காவல் ஆய்வாளர் திரு. இராஜசுந்தர், தனிப்பிரிவு காவலர் திரு. ராஜேஷ் உட்பட காவல்துறையினர் மற்றும் கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர். 

கருத்துகள்