முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மழை நீரை மோட்டார் மூலம் வெளியேற்றும் பணிகளை தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் ஆய்வு

 


தூத்துக்குடியில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதையொட்டி  மாநகராட்சி பகுதியில் பெய்த தொடர் மழையின் காரணமாக குடியிருப்பு பகுதி சாலையில் தேங்கியுள்ள மழை நீரை மோட்டார் மூலம் வெளியேற்றும் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.

----------------------------

தூத்துக்குடியில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதையொட்டி  மாநகராட்சி பகுதியில் பெய்த தொடர் மழையின் காரணமாக குடியிருப்பு பகுதி சாலையில் தேங்கியுள்ள மழை நீரை மோட்டார் மூலம் வெளியேற்றும் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு  (03.12.2021)   அன்று  செய்தார்கள். அருகில், மாநகராட்சி ஆணையாளர் திருமதி.சாருஸ்ரீ,இ.ஆ.ப., அவர்கள், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.எம்.சி.சண்முகையா அவர்கள் ஆகியோர் உடன் உள்ளார்கள்.

பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:



தூத்துக்குடியில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதையொட்டி  மாநகராட்சி பகுதியில் பெய்த தொடர் மழையின் காரணமாக மழை நீர் தேங்கியுள்ள தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நேற்றைய தினம் ஆய்வு மேற்கொண்டதையடுத்து மாநகரின் தாழ்வான பகுதிகளான தனசேகரன் நகர், ரஹ்மத் நகர், ஆதிபராசக்திநகர், கிருஷ்ணராஜபுரம், அன்னை வேளாங்கண்ணி நகர் மற்றும் ஐயாவிளை பகுதிகளில் 5 முதல் 30 வரையிலான பல்வேறு நிலையிலான திறன் கொண்ட குதிரை சக்தி  டீசல் மற்றும் மின் மோட்டார்களின் இயக்கநிலையினை ஆய்வு செய்யப்பட்டது. மேலும் பல்வேறு பகுதிகளில் காணப்படும் சாலையில் தேங்கியுள்ள மழை நீரை போர்கால அடிப்படையில் வெளியேற்றுவதற்கு கூடுதலாக மின் மற்றும் டீசல் மோட்டார்களை பயன்படுத்த வேண்டும் என உரிய அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டது என தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது தூத்துக்குடி வட்டாட்சியர் திரு.ஜஸ்டின், மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் உள்ளனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்