முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழ்நாடு முதலமைச்சர் காணொலி காட்சி மூலம் சார்பதிவாளர் அலுவலகத்தினை திறந்து வைப்பு

 


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை சார்பதிவாளர் அலுவலகத்தினை திறந்து வைத்தார்கள்

-------------------------------

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை சார்பதிவாளர் அலுவலகத்தினை இன்று (07.12.2021) திறந்து வைத்தார்கள். அதன்பின்னர் புதுக்கோட்டை சார்பதிவாளர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் குத்துவிளக்கேற்றினார்கள். மேலும் மரக்கன்று நட்டி வைத்தார்கள். 

புதுக்கோட்டை சார்பதிவாளர் அலுவலகம் சுமார் 25 சென்ட்; (3230 சதுர அடி) பரப்பில் சுமார் ரூ.93.26 லட்சம் மதிப்பில் சுற்றுச்சுவர் வசதியுடன் கட்டப்பட்டுள்ளது. பொதுமக்கள் காத்திருப்பு அறை, சார்பதிவாளர் அறை, கணினி அறை, பதிவு வைப்பு அறை, மதிய உணவு அறை, இ சான்றிதழுக்கான அறை, மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வுதள அமைப்புகள், அவர்களுக்கான கழிப்பறைகள் மற்றும் அலுவலர்கள், பொதுமக்கள் பயன்பாட்டிற்கான அறை, ஆண் மற்றும் பெண்களுக்கான தனித்தனியாக கழிப்பறை வசதிகள், உள்ளது. குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. 

நிகழ்ச்சியில் திருநெல்வேலி பதிவு மன்ற துணை பதிவு தலைவர் திரு.ரு.ளு.ஆறுமுகம், தூத்துக்குடி மாவட்ட பதிவாளர் திரு.ஆ.பால்பாண்டி, தணிக்கை மாவட்ட பதிவாளர் திருமதி.நூர்ஜஹான், நிர்வாக சார்பதிவாளர் திரு.குருசாமி, வழிகாட்டு சார்பதிவாளர் திரு.மகாராஜன், பஞ்சாயத்து தலைவர்  ஆகியோர் கலந்துகொண்டனர்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்