டிராகன் ஷிட்டோரியூ கராத்தே சங்கம் சார்பாக மூன்றாவது மண்டல அளவிலான கராத்தே போட்டி கடந்த 19 -12 - 2021 அன்று தூத்துக்குடியில் ( கேம்ஸ் வில் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் ) வைத்து நடைபெற்றது
இதில் நான்கு மாவட்டத்தில் இருந்து 200 க்கு மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்து கொண்ட இந்தப்போட்டியில் முள்ளக்காடு பகுதியில் உள்ள மாஸ்டர் ஆர்கே பறக்கும்படை ஸ்போர்ட்ஸ் அகடமியை சார்ந்த மாணவ மாணவியர்கள் வெற்றி பெற்றார்கள்
வெற்றி பெற்ற இந்த மாணவ மாணவியர்களை ஊக்குவிக்கும் வகையில் மிக எளிமையாகவும், கொரோனா தொற்று வழிகாட்டு விதிமுறைகளுக்கு உட்பட்டு நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் முள்ளகாடு பஞ்சாயத்து தலைவர் திரு. K .கோபிநாத் நிர்மல் அவர்கள் முன்னிலை வகிக்க முத்தையாபுரம் காவல் ஆய்வாளர் திரு H.ஜெயசீலன் B.com அவர்கள் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்களையும் சான்றிதழ்களையும் வழங்கி , விளையாட்டின் மகத்துவத்தையும் -அதன் நன்மைகளையும் - மாநில - மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க பயிற்சி - மற்றும் முயற்சி இவைகளை கை கொள்ளுமாறு மாணவ மாணவியர்களை வாழ்த்தி பாராட்டி ஊக்குவித்து பேசினார்
கருத்துகள்
கருத்துரையிடுக