முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

குடியரசு தினவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து, துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம்





தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், குடியரசு தினவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.கண்ணபிரான் அவர்கள் தலைமையில், நடைபெற்றது.

 ---------------------- 

 தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடியரசு தினவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து, துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.கண்ணபிரான் அவர்கள் தலைமையில் இன்று (24.01.2022) நடைபெற்றது. 

 கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.கண்ணபிரான் அவர்கள் தெரிவித்ததாவது:- தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 26.01.2022 அன்று தருவை மைதானத்தில் குடியரசு தின விழா சிறப்பாக நடைபெற உள்ளது. மாநகராட்சியின் சார்பில் விழா நடைபெறும் மைதானத்தில் சிறிய சின்டெக்ஸ் தொட்டிகள் மூலம் குடிநீர் வசதிகள் ஏற்படுத்திட வேண்டும். மேலும், மைதானம் தூய்மையாக இருக்க தேவையான குப்பை தொட்டிகள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் மூலம் தூய்மைப்படுத்திட வேண்டும். 

அவசர காலத்தில் பயன்படுத்துவதற்கு தீயணைப்புத்துறை மூலம் தீ தடுப்பு கருவிகள், தீயணைப்பு வாகனம் மற்றும் பணியாளர்கள் தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும். பொது சுகாதாரத்துறையின் மூலம் முதலுதவி சிகிச்சை அளிக்க மருத்துவ குழு மற்றும் 108 அவசர ஊர்தி தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும்.
.

 கொரனா கோவிட் நோய் தொற்றின் காரணமாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின் படி குடியரசு தின விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் பொது சுகாதாரதுறையின் மூலம் உடல் வெப்பநிலை கண்டறியும் கருவியின் மூலம் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் சானிடைசர் மற்றும் முககவசம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

தியாகிகளை கௌரவிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். நலத்திட்ட உதவிகள் பெறும் பயனாளிகளின் பட்டியலை முன்கூட்டியே தயார் செய்து மாவட்ட நிர்வாகத்திற்கு வழங்கிட வேண்டும். மேலும், சிறப்பாக பணியாற்றும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை தேர்வு செய்து நடைபெற உள்ள குடியரசு தின விழாவில் சான்றிதழ்கள் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக, அனைத்துத்துறை அலுவலர்களும் குடியரசு தினவிழாவில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். மேலும், தங்களது அலுவலகத்தில் பணியாற்றும் பணியாளர்களையும் குடியரசு தினவிழாவில் கலந்து கொள்ள வைக்க வேண்டும். குடியரசு தினவிழாவில் அலுவலர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து கடந்த ஆண்டை காட்டிலும் சிறப்பாக கொண்டாட அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என தெரிவித்தார். 

 கூட்டத்தில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.கோபி, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் நேர்முக உதவியாளர் (பொது) திருமதி.அமுதா, கோட்டாட்சியர்கள்;, அனைத்து துறை அலுவலர்கள், அனைத்து வட்டாட்சியர்கள் கலந்துகொண்டனர். 


 .

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்