.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
-------------------
தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் (03.01.2022 ) அன்று நடைபெற்றது.
கூட்டத்தில்;; மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள், முதியோர் உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, பட்டா பெயர் மாற்றம், கல்விக்கடன், தொழிற்கடன் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வேண்டிய கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை, பொதுமக்களிடமிருந்து பெற்றுக்கொண்டார்.
மாற்றுத்திறனாளிகளின் இருப்பிடங்களுக்கு சென்று கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
மேலும், முதலமைச்சரின் தனி பிரிவு மனுக்கள்;; மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள்.
நிகழ்ச்சியில் 4 நரிக்குறவர் பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகைக்கான ஆணையினை வழங்கினார்கள்.
மஞ்சப்பையை ஊக்குவிக்கும் விதமாக திருச்செந்தூர் மாற்றுத்திறனாளிகள் தொண்டு நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்பட்ட மீண்டும் மஞ்சப்பைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் முன்னிலையில் வழங்கப்பட்டது.
மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஒலிம்பிக்கில் பங்கேற்று 185 கிலோ பளுதூக்குதலுக்கான பெறப்பட்ட சான்றிதழினை செல்வி.முத்துமீனா அவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார்.
கோவில்பட்டியில் நெருப்பு தடைகளை தாண்டி 10 மாணவர்கள் ஸ்கேட்டிங்கில் உலக சாதனைக்காக முயற்சி செய்த மாணவர்களுக்கு யூனிக்கோ வேர்ல்டு மூலம் வழங்கப்பட்டுள்ள சான்றிதழை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் காண்பித்து மாணவர்கள் வாழ்த்து பெற்றார்கள்.
கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஃ கூடுதல் ஆட்சியர் திரு.சரவணன், இ.ஆ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் திரு.கண்ணபிரான், மகளிர் திட்ட திட்ட இயக்குநர் மரு.வீரபத்திரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பொது திருமதி.அமுதா, உதவி ஆணையர் கலால் திரு.செல்வராஜ் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக