தூத்துக்குடி மாவட்ட தேர்தல் அலுவலர் - மாவட்ட. ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக்கூட்டம்
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வரைவு வாக்குச்சாவடி பட்டியல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின்
பிரதிநிதிகளுடனான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர்ஃமாவட்;ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது
பிரதிநிதிகளுடனான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர்ஃமாவட்;ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது
-----------------
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வரைவு வாக்குச்சாவடி பட்டியல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர்ஃமாவட்;ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (04.01.2022) நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டத்தில் புதிதாக விரிவாக்கப்பட்ட திருச்செந்தூர் நகராட்சி வார்டு வரையறை செய்தபின், 27 வார்டுகளாக நிர்ணயம் செய்யப்பட்டு நடைபெறவுள்ள நகர்புற உள்ளாட்சி சாதாரண தேர்தல் 2021-க்கு 32 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு, வரைவு வாக்குச்சாவடி பட்டியல் 03.01.2022-ல் வெளியிடப்பட்டது.
இக்கூட்டத்தின் முடிவில் வரைவு வாக்குச்சாவடி பட்டியல் இறுதி செய்து, இறுதி வாக்குசாவடி பட்;டியல் வெளியிடப்பட்டது என மாவட்ட தேர்தல் அலுவலர்ஃமாவட்;ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ஆறுமுக கனி, திருச்செந்தூர் நகராட்சி ஆணையாளர் திரு.நா.தி.வேலவன், தி.மு.க. தூத்துக்குடி தெற்கு மாவட்ட அலுவலக பொறுப்பாளர் திரு.அக்னல், அ.இ.அ.தி.மு.க. மாவட்ட கழக துணை செயலாளர் திரு.சந்தானம், சி.பி.ஐ. (மா) தூத்துக்குடி மாநகர் செயலாளர் திரு.ராஜா, தேசியவாத காங்கிரஸ் கோவில்பட்டி நகர தலைவர் திரு.பாரதிராஜா மற்றும் அலுவலர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக