தூத்துக்குடி சம்ஸ்கார் பாரதி சார்பில் பாரத அன்னைக்கு 73வதுகுடியரசு தினத்தில் சமரப்பணம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பாரத மாதா படத்திற்கு சமஸ்கார் பாரதியின் தூத்துக்குடி மாவட்ட தலைவர் திரு கணேசன் - SMS இசை மற்றும் நாட்டியப்பள்ளி நிர்வாகி திருமதி மாரி கணேசன் ஆகியோர் மலர் தூவி வணங்கி மரியாதை செலுத்தினர்
பின்னர் SMS இசைப்பள்ளி மாணவர்கள் இசை
கருவிகளோடு தேசபக்தி பாடல்கள் இசைத்தனர் . நிகழ்ச்சியில் சமூக ஆர்வலரும் ஹிந்தி பண்டிட் டுமும்ஆன திரு.ராம்ஜி அவர்கள்.சிறப்பு விருந்தினராக கலந்து கொன்டு சிறப்புரை ஆற்றி அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
சமஸ்கார் பாரதியின் மாவட்ட தலைவர் திரு கணேசன் சிறப்பு விருந்தினர் திரு.ராம்ஜி அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவப்படுத்தி நன்றி உரையாற்றினார்
கருத்துகள்
கருத்துரையிடுக