திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மாசித் திருவிழா முன்னேற்பாடு பணிகள். குறித்து ஆலோசனைக் கூட்டம்
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மாசித் திருவிழா 07.02.2022 முதல் 18.02.2022 வரை கொண்டாடுதல் தொடர்பான முன்னேற்பாடுகள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் வைத்து மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (03.02.2022) நடைபெற்றது. திருக்கோயில்களில் திருவிழாக்கள் நடத்துவது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை ஆணையரால் வழங்கப்பட்டுள்ள நிலையான இயக்க வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாத வகையில் நடத்துதல் தொடர்பாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
அதன்படி, தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மாசித் திருவிழா 07.02.2022 முதல் 18.02.2022 வரை 12 தினங்கள் கொண்டாடப்படவுள்ளது. மாசித் திருவிழா நிகழ்ச்சியில் தமிழகத்திலுள்ள பல்வேறு மாவட்டங்களிலிருந்து இலட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்;க்கப்படுகிறது.
எனவே பக்தர்களுக்கு குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைத்திடவும், சுகாதார முறையில் விநியோகம் செய்திடவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள குடிநீர் வடிகால் வாரியம் துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் குரும்பூர் -குரங்கன்தட்டு, திருச்செந்தூர் தெப்பக்குளம் ஆகிய நீரேற்று நிலையங்களிலும் தேரோட்டம் நடைபெறும் பாதைகளும் மின்சாரம் தங்கு தடையின்றி கிடைத்திட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருவிழா காலங்களில் தொற்று வியாதிகள் பரவாமல் தடுக்கும் வகையிலும் திருக்கோயில் பகுதிகளில் குப்பைக்கூளங்கள் சேராதபடிக்கும் சுகாதாரமாக வைத்திடவும், ஈ, கொசுக்களின் தொல்லை இல்லாமல் இருக்க நகர் பகுதி மற்றும் திருக்கோயில் வளாகங்களில் கொசு மருந்து தெளித்திடவும், திருவிழா காலங்களில் மருத்துவ குழுவினரை நியமித்து 24 மணி நேர ஆம்புலன்ஸ் வசதியுடன் அவசர மருத்துவ சிகிச்சை வழங்குவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள பொது சுகாதார மற்றும் நோய் தடுப்பு துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. திருவிழா காலங்களில் பக்தர்களுக்கு வசதியாக போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்திக்கொடுத்திடவும், தொலைதொடர்பு வசதிகள் ஏற்படுத்திக் கொடுத்திடவும் துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பள்ளது.
மேலும் கடலில் நீராடும் பக்தர்களின் பாதுகாப்பு வசதிக்காக மீன் வளத்துறையின் மூலம் நீச்சல், கடலாள், முத்துக்குழி ஆகிய பணியாளர்களுடன் சேர்ந்து தீயணைப்பு துறையினரும் உயிர் மீட்பு பணிகளில் ஈடுபட தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதோடு திருவிழா காலங்களில் தீயணைப்பு ஊர்தி முழுமையாக தண்ணீர் நிரப்பபட்டும், மருத்துவ ஊர்தியும் எந்த நேரமும் தயார் நிலையில் வைத்திருக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
திருவிழா காலங்களில் திருக்கோவில் உள்ளும், புறமும் சுவாமி சப்பரத்திற்கும் உரிய பாதுகாப்பு வழங்கிடவும் வீதிகளில் உள்ள தற்காலிக கடைகள் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றி போதிய பாதுகாப்பு வழங்கிடவும், தேரோட்டம் அன்று தேருக்கு முன்பும் பின்பும் பாதுகாப்பு வளையங்கள் அமைத்து தேரோட்டம் சிறப்பாக நடைபெற உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருக்கோவில் சுற்றுவட்டார தெருக்கள் மற்றும் திருக்கோவில் முழுவதும் பழுதடைந்த தெருவிளக்குகளை பழுதுகள் நீக்கி சீரமைத்திடவும், பாதாள சாக்கடை அமைந்துள்ள பகுதிகளில் வர்;ணங்கள் பூசி எச்சரிக்கை பலகை வைத்திடவும், திருக்கோவிலுக்கு சொந்தமான பணியாளர் குடியிருப்பு தங்கும் விடுதிகள், கழிவறைகள் அனைத்தும் சீரமைத்து சுகாதாரம் பேண நகராட்சி நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பழுதடைந்த சாலைகளை சீரமைத்திட நெடுஞ்சாலைத்துறையினருக்கும், பழுதான தேர்கள் சீரமைத்திடவும், தெப்ப தேர்களின் கட்டமைப்புகளை உறுதிசெய்திடவும் பொதுப்பணித்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருவிழா காலங்களில் அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயலாற்றி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மாசி திருவிழாவினை சிறப்பாக நடத்திட முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ்.ஜெயக்குமார், இ.கா.ப., மாவட்ட வருவாய் அலுவலர் மரு.கண்ணபிரான், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் திருமதி.அமுதா, இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் ஃ செயல் அலுவலர் திரு.குமரதுரை மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக