தேசிய அளவிலான வூசூ போட்டிக்கு. தூத்துக்குடி திருஇருதய மெட்ரிக் பள்ளி மாணவர்கள் தேர்வு




 தேசிய அளவிலான வூசூ  போட்டிக்கு தூத்துக்குடி  திருஇருதய மெட்ரிக் பள்ளி மாணவர்கள் தேர்வு. கடந்த மாதம் 27 , 28 தேதிகளில் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற மாநில அளவிலான வூசூ  போட்டியில்  திருஇருதய மெட்ரிக் பள்ளி மாணவர்கள் மூன்று பேர் கலந்து கொண்டனர்.


 நாற்பத்தி ஐந்து கிலோ எடை பிரிவில் மாணவர்கள் அருண்குமார் தங்கப்பதக்கமும் , 52 கிலோ எடைப்பிரிவில் மாணவர் முத்துவேல் தங்கப்பதக்கமும், இருபத்தி எட்டு கிலோ எடைப்பிரிவில் மாணவர் அசோக்குமார் வெள்ளிப் பதக்கமும் வென்றனர். தங்கம் மற்றும் வெள்ளி வென்ற மாணவர்கள் தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.  



வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.  இவ்விழாவில் பள்ளியின் முதல்வர் அருட்சகோதரி அண்டனி சாரால் ரோஸ் அவர்களும் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் கருப்பசாமி மற்றும் பயிற்சியாளர்கள் சாலமோன், சுடலை கண் ஆகியோர் கலந்து கொண்டனர் . பள்ளியின் தாளாளர் அவர்களும் மற்ற ஆசிரியப் பெரு மக்களும் வெற்றி பெற்ற மாணவர்களையும் பயிற்சியாளர் களையும் பாராட்டி கௌரவித்தனர். 


விழா ஏற்பாடுகளை பள்ளியின் தலைமை பயிற்சியாளர் சாய் இன்டர்நேஷனல் அகாடமி நிறுவனர் முத்து சங்கர் குமார்  செய்திருந்தார்.

கருத்துகள்